கைதி தப்பி ஓட்டம்: போலீசார் விசாரணை
கோவை, அக்.29- கோவை மத்திய சிறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த தண்டனைக் கைதி தப்பி ஓடிய நிலையில், காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சிறைத் துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வரு கிறது. இங்கு நன்னடத்தை அடிப்படையில், கைதிகள் போலீ சார் பாதுகாப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் ஞாயிறன்று காலை ஷிப்ட் மாற்ற சிறை காவலர்கள் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்ட போது கைதி ஒருவர் மாயமானது தெரிய வந்தது. அதிகாலை யில் இருந்து அவரை பார்க்கவில்லை என சக கைதிகள் தெரி வித்துள்ளனர். மாயமான கைதி கூடலூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற விஜய் ரத்தினம் என தெரியவந்துள்ளது. இது குறித்து காட்டூர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியிடம் பணம் பறித்தவர் கைது
கோபிசெட்டிபாளையம், அக்.29- கோபிசெட்டிபாளையம் அருகே மூதாட்டியிடம் இருந்து பணத்தை பறித்து சென்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், பங்க ளாப்புதூர் சாலையில் ஒண்டிமுனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா (65). இந்நிலையில், இவரது கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சகுந்த லாவிடம் இருந்த பணப்பை மற்றும் செல்போனை பறித்து, அவரை தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முன்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம், கானைகோனூர், புதுக்காலனியைச் சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், அவர் தான் மூதாட்டி சகுந்தாவை தாக்கி பணமும், செல்போனும் பறித்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து நடத்திய விசாரணையில், கிறிஸ்தாஸ் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
நாமக்கல், அக்.29- நாமக்கல் அருகே அரசுப் பள்ளி மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மு.தங்க ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்ப தாவது, நாமக்கல் மாவட்டம், காரைக்குறிச்சி புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியர், சில மாணவியர்களை தவறான நோக்கத்தோடு தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்த, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப் போது அங்கு பணிபுரியும் சக ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியரை அறையில் வைத்து பூட்டினர். பின்னர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர் மாவட்ட நிர்வாகம் இதுபோன்று பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு சார்பில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரா கவும், போக்சோ சட்டங்கள் குறித்து அனைத்து மாணவ, மாணவியரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்திய மாணவர் சங்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் ஒரு குழு வினை அமைக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் வலியுறுத் துகிறது. இந்த குழுவில் மாணவர் சங்க நிர்வாகிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனிடையே வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியரை காவல் ஆய்வாளர் கோமதி உள் ளிட்ட போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதன்பின் அவரை நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஆசிரியரை பணி யிடைநீக்கம் செய்யவும் கல்வி அதிகாரி கள் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத் தக்கது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு போனஸ் உடன்பாடு
அவிநாசி, அக்.29- அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலா ளர்களுக்கு 13.50 சதவிகித போனஸ் உடன் பாடு ஏற்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளர் சங்க பிரதி நிதிகளும், விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி கள் இடையிலான பேச்சுவார்த்தை தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. இதில் தீபாவளி போனசாக 13.50 சதவிகிதம் வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் என்.எம்.முத்துச்சாமி, செந்தில், சம்பத்குமார், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி, ஏஐடியூசி செல்வராஜ், ரவி, ஏடிபி நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடன் தொல்லையால் பெண் தற்கொலை
ஈரோடு, அக்.29- அரச்சலூர் அருகே கடன் தொல்லையால் பெண் ஒரு வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள டி.மேட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசெல்வன் (40). இவரது மனைவி ரதி (34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்க ளுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இதயக் கோளாருக்கு சிகிச்சை பெறுவதற்காக கடன் பெற்றுள்ள னர். அந்த கடனை கட்ட முடியாத அளவில் தொடர் நெருக்கடி கள் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் ரதி காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சண்முகசெல்வ னும், அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரதி ஒரு அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடைக்கு சென்று திரும்பிய சண்முகசெல்வன் இதனையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுகுறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரச்ச லூர் போலீசார், ரதியின் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக் காக பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம், அக்.29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நங்கவள்ளியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் ஜல கண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அருணாச்சலம், மாவட்டக்குழு உறுப்பினர் சண் முகம், நங்கவள்ளி நகர செயலாளர் நடராஜ், மாதர் சம்மே ளன மாவட்டப் பொருளாளர் அம்பிகா, ஏஐடியுசி சந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தரமற்ற சூரத் சேலைகள் விற்பனை?
சேலம், அக்.29- இளம்பிள்ளை பகுதியில் தரமற்ற சூரத் சேலைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை தரமான சேலைக்கு பெயர் போன ஊர். கைத்தறி மற் றும் விசைத்தறி மூலம் தரமான சேலைகள் தயார் செய்து வழங்கப்பட்டு வருவதால் தரத் தின் முக்கியத்துவம் கருதி தமிழ்நாடு மட்டு மின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வாங்கி செல்கின்றனர். அதோடு விசைத்தறி தயா ரிப்பாளர், நூல் தயாரிப்பாளர், வார்ப்பு ராட்டை தொழிலாளி, நெசவு தொழிலாளி, வாஷிங் செய்பவர், அட்டை அடிப்பவர், டெக்ஸ் டைல் தொழில் செய்பவர் என பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நி லையில், சில வியாபாரிகள் சூரத்திலிருந்து தரமற்ற 2, 3 முறை மட்டுமே உபயோகப் படுத்தக்கூடிய சேலைகளை இறக்குமதி செய்து ரூ.300, ரூ.400 என்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு இளம்பிள்ளை பகுதி யில் சேலை உற்பத்தியில் ஈடுபடும் தொழி லாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இதுகுறித்து இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த சேலை உற்பத்தியாளர்கள் கூறுகை யில், வெளி மாநில தரமற்ற சேலைகளால் பாரம்பரியமிக்க இளம்பிள்ளை சேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தரமற்ற சேலைகளை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் சேலைகளை வாங்க பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும், என்றனர்.
வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
தருமபுரி, அக்.29- அத்திப்பள்ளியில் ஏற்பட்ட வெடி விபத் தில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த நபர் களின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லை யான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த அக்.7 ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத் தில் 17 பேர் உயிரிழந்தனர். இதில் தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள டி.அம்மா பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பரிதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் ஆகிய 7 பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறி வித்தது. இந்நிலையில், அம்மாபேட்டை கிரா மத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம், ஆனைக் கல் தாலுகா வட்டாட்சியர் கரியநாயக், சித்த ராஜ், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர்தூவி குடும் பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சத்திற் கான ரூபாய்கான காசோலையை வழங்கி னர். இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர் அம்பேத்கர், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட் டச் செயலாளர் சாக்கன் சர்மா ஆகியோர் உட னிருந்தனர்.
சமுதாய மண்டபத்திலிருந்த பொருட்கள் சேதம்
தருமபுரி, அக்.29- பாலக்கோடு அருகே அரசு சமுதாய மண்டபத்திலிருந்த பொருட்கள் சேதப்படுத் திய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன் றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி சென் னப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.85 லட்சம் மதிப் பீட்டில் சமுதாய திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. மண்டபத்திற்கு அடிப்படை தேவைகளான சமையல் பாத்திரம், நாற் காலி, கேஸ் அடுப்பு, மணமக்கள் நாற்காலி கள் உள்ளிட்ட ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அடை யாளம் தெரியாத நபர்கள் சிலர் திருமண மண்டபத்தில் புகுந்து நாற்காலி, எலக்ட்ரிக் சுவிட்ச், கழிவறை குழாய்கள், ஜன்னல் கண் ணாடி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதபடுத்தி சென்றுள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் மண்டபம் திறந்து கிடப்பதையும், பொருட்கள் சேத மாகி உள்ளதையும் கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாரண்ட அள்ளி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மண்ட பத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத் திய அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
கருங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
கோபிசெட்டிபாளையம், அக்.29- அனுமதியின்றி கருங்கற்களை கடத்திச்சென்ற லாரி பறி முதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் பகுதியில் கனிம வள திருட்டை தடுக்கும் வகையில் அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி செல் லும் சாலையில் எதிரே வந்த டிப்பர் லாரியை சோதனை யிட்டு, ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் கனிமவளத்துறை அதி காரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அதேபகுதி யில் தனியார் குவாரியிலிருந்து அரசு அனுமதியின்றி மூன்று யூனிட் கருங்கற்கள் ஏற்றி வந்ததை ஒப்புகொண்டார். ஆனால், அவர் அங்கிருத்து தப்பி சென்றார். இதையடுத்து அதிகாரி கள் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டு நரை தேடி வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம்
சேலம், அக்.29- மேச்சேரி அருகே மானத் தாள் நல்லகவுண்டன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே சின்னப்பொண்ணு என்பவர் நடந்து சென்றுள் ளார். அப்போது, அங்குள்ள புதரில் சிறுத்தையை பார்த் ததாக கூறி அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். இது குறித்து மேட்டூர் வனத்துறை யினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர், சம் பவ இடத்திற்கு சென்று கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என வனத்துறை யினர் எச்சரித்துள்ளனர்.