திருப்பூர் செப்.10 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 சார்பாக ஞாயிறன்று தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறியீட்டு ரிப்பன் அணிவித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன் னிட்டு, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத் தப்பட்டது. செயல்பாடுகள் மூலம் நம்பிக் கையை உருவாக்குதல் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தின் முன்பு பொது மக்களுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறியீட்டு ரிப்பன் அணிவித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன் னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசு கையில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தற் கொலை தீர்வாகாது, பிரச்சனைகளை கடந்து செல்ல வேண்டுமே தவிர, அதில் மூழ்கக் கூடாது. பிரச்சனைகளை சமாளித்து வெல்ல வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்தித்து தற்கொலை செய்வது ஒரு கோழைத்தனம்.போதை பழக்கம் தற்கொலையை தூண்டும். உன் உடலை மட்டுமல்ல அனைவருடைய கனவுகளை கொல்வதற்கு சமம். தற்கொலை நடத்தைகள் மற்றும் அவற்றை எவ்வாறு திறம்பட தடுப்பது என்பது பற்றிய விழிப்பு ணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பேசினார். மாணவர் செயலர்கள் மது கார்த்திக், அபிந்தரன், ஷிம்ர் நவீன் ஆகியோர் தலை மையில் மாணவ, மாணவிகள் தற் கொலையை தடுப்போம், தற்கொலை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் போன்ற உறுதிமொழியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி யும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், மஞ்சள் ரிப்பன் கொண்ட விழிப்புணர்வு குறி யீட்டை அணிந்தும் விழிப்புணர்வு ஏற் படுத்தினர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.