districts

img

நகை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர், நவ.29- நகைக் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள  கண்காணிப்பு கேமரா பதிவுகளை  தொடர்ந்து பார்த்து, சந்தேகத்திற்குரியவர்க ளின் நடமாட்டம் இருந்தால் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என நகை மற்றும்  அடகு கடை உரிமையாளர்களுக்கு காவல்து றையினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் உள்ள ஜாய் ஆலுகாஸ் நகைக்கடையில் செவ்வாயன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில்  திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட இடங்க ளில் உள்ள நகை மற்றும் அடகு கடை உரிமை யாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் புத னன்று குமரன் சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் நடைபெற்றது.  இதில், மாநகர காவல் உதவி ஆணையர்  அணில் குமார் கலந்து கொண்டு பேசுகை யில், நகை கடை மற்றும் நகை அடகு கடைக ளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது  அவசியம். அது மட்டுமல்லாது கண்காணிப்பு  கேமராவில் பதிவாகும் காட்சிகளை தினந் தோறும் பார்வையிட வேண்டும். அதில் சந்தே கத்திற்குரியவர்களின் நடமாட்டம் இருந்தால்  உடனடியாக அருகில் உள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும்  24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக் கக்கூடிய வகையில் பாதுகாவலர்களை நிய மிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட் டத்தில் ஏராளமான நகை மற்றும் அடகு கடை  உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.