திருப்பூர், ஆக.4- ஒரத்துப்பாளையம் அணையில் 800 ஏக்கர் பரப்பளவில் 2.5 லட்சம் மரக்கன்று கள் நடும் பணியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணை யில் ‘வனத்துக்குள் திருப்பூர்’ அறக்கட் டளையின் சார்பில் 800 ஏக்கர் பரப்பள வில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் ஞாயிறன்று நடைபெற் றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரக்கன்றுகளை நடவு செய்து பேசு கையில், தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவிகிதமாக உயர்த் துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக் கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. இதன் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவங்களின் ஒத்துழைப்புட னும், மக்களின் முழு அளவிலான பங்க ளிப்புடனும், பலதரப்பட்ட நம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத்திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி, பசுமைப் போர்வையை விரிவுப்படுத்டும் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு பசுமை இயக்கத்தின் மூலம் திருப் பூர் மாவட்டத்தில் வனத்துறை 2022 - 23 ஆம் ஆண்டில் 80 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயப்பண்ணை கள், கல்வி நிறுவனங்கள், தொழிற் சாலைகள், நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட் டுள்ளது. 2023 - 24 ஆம் ஆண்டில் 1,50,000 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள் ளது. 2024 - 25 ஆம் ஆண்டில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 2,50,000 நாற்றுகள் உற்பத்தி செய்து இலவச மாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளக்கோவில் ஒன் றியத்தில் தாசநாயக்கன்பட்டி அருகே அமைந்துள்ள வட்டமலை ஓடை அணை யில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற் றது. நல்லதங்காள் ஓடையின் குறுக்கே உள்ள பகுதியிலும் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் நோக்கம் குறித்தும் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் துல்லியமாக எடுத்துரைக்கப் பட்டது. ஏறத்தாழ 9 ஆண்டு காலமாக இந்நிகழ்வு நடைபெற்று வருவது பாராட்டுக்குரியது. இப்பணி ஒரு மகத் தான பணி மற்றும் அவசியமான பணியா கும். எனவே, அனைவரும் துணை நின்று ஒட்டு மொத்தமாக மனித வளம், மண்வளம், நீர், சுற்றுச்சூழலை பாது காப்போம், என்றார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.