மேட்டுப்பாளையம், ஜூலை 26- நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை மீண்டும் நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து விநா டிக்கு 20 ஆயிரம் கனஅடி உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள பில்லூர் அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக் கான நீர் வரத்து தொடர்ந்து அதிக ரித்தபடி இருந்தது. இந்நிலையில், நீர் வரத்து 20ஆயிரம் கனஅடியாக உயர்ந்ததால், வியாழனன்று மாலை 89 அடியாக இருந்த நீர்மட்டம், கிடுகிடுவென உயர துவங்கி, வெள்ளியன்று காலை 11 மணியள வில் அணையின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் 97 அடியை கடந்துள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளதால், இது அப் படியே உபரிநீராக பவானியாற் றில் வெளியேற்றப்படுகிறது. அணை யின் நீர்மட்டம் 97 அடியை எட்டும் போது அணையின் பாதுகாப்பு அதன் நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் பவானியாற்றில் வெளி யேற்றப்படுவது வழக்கம். இதனால் பவானி ஆற்றின் வேகமும், வெள் ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நி லையில், மேட்டுப்பாளையம் பவானி யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெ ருக்கை நேரில் ஆய்வு செய்த வட்டாச் சியர் வாசுதேவன் பவானியாற்று பாலத்தின் அருகே காவல்துறை வாகனம் மூலம் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த னர். பவானியாற்று கரையோரப் பகுதி களான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப் பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக் கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை 16 ஆம் தேதி பில்லூர் அணை நிரம்பி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அணையின் மதகுகள் திறக்கப் பட்டன. அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் கடந்த ஜூலை 21 ஆம் தேதி மாலை நீர்திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பின்னர் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.