districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் கோரிக்கை மனு

ஈரோடு, நவ.23- நிலையான வேலை விதிகள் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐ டியு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட் சியரிடம் வெள்ளியன்று மனு அளித்தனர்.  இந்திய மருந்து மற்றும் விற்பனைப் பிரதி நிதிகள் சம்மேளனத்தின் சார்பில்,  நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி  தலைநகர் டெல்லியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனையொட்டி, அதே நாளில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட விற்பனை அபிவிருத்திப் பணியாளர்களுக்கு நிலையான வேலை விதி கள் வேண்டும். விற்பனை அபிவிருத்திப் பணி யாளர்கள் சட்டம் 1976-ஐ நீர்த்துப் போகச்  செய்யும் நான்கு தொழிலாளர் சட்டத்  தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். எஸ்பிஇ சட்டத்தை மதிக்காத நிறுவனங் களைத் தண்டிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அம்மனுவை, ஒன்றிய அரசின் தொழிலாளர் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டி, ஈரோடு  கிளை நிர்வாகிகள்  சுரேஷ் பாபு, சங்கரன், கோபிநாத், செயற்குழு உறுப்பினர்கள் கணே சன், சரவணன், திருமுருகன், மாநில துணை பொதுச் செயலாளர் நாராயண சுவாமி ஆகியோர் அடங்கிய குழு மாவட்ட  ஆட்சியரிடம் கொடுத்தனர்.