districts

img

ஈஷா அமைப்பால் கொரோனா பரவும் அபாயம்

கோவை, மார்ச் 1- ஈஷா யோகா மையத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டப்படுவதற்கு தடை  விதித்து, கொரோனா பரவலை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு அமைப் பினர் புகார் மனு அளித்தனர். கொரோனா விதிமுறைகளை துளியும் மதிக்காது, பல்லாயிரக்கணக்கான மக்களை ஒருங்கிணைய வைத்து சிவராத்திரி நிகழ்ச் சியை நடத்தவிருக்கும் ஈஷா நிர்வாகத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் தலைமையில் செவ்வாயன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வீட்டி லிருந்தே பாருங்கள் என ஒரு பக்கம் தொலைக் காட்சிகளில் விளம்பரம் செய்து கொண்டு, கோவை ஈஷா யோக மையத்தில் பல்லாயி ரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டுள் ளது. அதாவது, தான் அழைக்கவில்லை, தானாக சேர்ந்த கூட்டம் என்று நாளை நீதி மன்றத்தில் சொல்வதற்காகவே வீட்டிலி ருந்தே பாருங்கள் என்ற விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.  மேலும், அரசு போக்குவரத்து கழகம் ஒரு  பக்கம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து  கூட்டத்தைக் கூட்டுகிறது. மறுபக்கம், காவல் துறை போக்குவரத்தை எல்லாம் ஒழுங்கு செய்து, பாதுகாப்பு கொடுத்து வருகிறது. மற்றொரு புறம் ஒரு லட்சம் ரூபாய் டிக்கெட் டில் மட்டும் பத்தாயிரம் நாற்காலிகள் போடப் பட்டு வசூல் வேட்டையை ஈஷா நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே, இது திட்ட மிட்ட ஏற்பாடு அல்லவா. இந்தக் கூட்டத்தில்  கொரோனா பரவாதா? இதையெல்லாம் காவல்துறை கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றது. அனுமதி அளிக்கின்றது.  பாதுகாப்பும் தருகிறது. இவ்வாறு கு.ராம கிருட்டிணன் கூறினார். முன்னதாக, இந்த புகார் மனுவினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப் பாளர் சுசி கலையரசன், சிபிஐ(எம்எல்) வேல் முருகன், பாலமுருகன், தபெதிக நிர்வாகிகள் சாஜித், சோமசுந்தரம், பிரகாஷ், லலிதா, ஜீவா னந்தம், விஜயகுமார் உள்ளிட்டோர் அளித்த னர்.