districts

img

மனைபட்டா வழங்கக்கோரி மனு

தருமபுரி, மார்ச் 7- பல தலைமுறைகளாக வீடு கட்டி குடியிருந்து வரு பவர்களுக்கு மனைபட்டா வழங்க வலியுறுத்தி எர்ரப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எர்ரப்பட்டி நாகாவதி அணை அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும், இந்நிலத்தில் கிணறு வெட்டி, மின் இணைப்பு பெற்று விவசாயமும் செய்து வரு கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் குடியிருக் கும் பகுதிக்கு மனைபட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளி டம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், அனுபவ நிலத்தை கிராம நிர்வாக அலு வலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அளவீடு செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட் டதற்கு, இந்த இடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு மனை பட்டா வழங்க உள்ளதாக தெரிவித்தனர். எனவே, பல தலை முறைகளாக அனுபவத்தில் உள்ள இந்நிலத்தை கையகப் படுத்தும் முயற்சியை கைவிட்டு, மனைபட்டா மற்றும் நிலப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.