திருப்பூர் ஜூலை 6- திருப்பூர் மாவட்டத்தில், மாணவர்கள் இடையே அதி கரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் வடக்கு தாலுகா குழு அளித்த மனுவில், மாணவர்கள் இடையே தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், மாவட்டத் துணைத் தலைவர் கல்கி ராஜ், துணை செயலாளர் ரேவந்த் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீஹரி, தாலுகா செயலாளர் கதிரவன் மற்றும் தாலுகா உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.