திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட் சியில் புதன் அன்று மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. இம் முகாமில் இடுவாய் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும்படி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. இடுவாய் சின்னம்மன் மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்ட இம்மு காமில் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள மாவட்ட அளவிலான முக்கிய அதிகாரிகள் நிகழ்ச்சி யில் பங்கேற்றனர். இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் க. கணேசன் மாவட்ட வருவாய் அலுவலரி டம், இடுவாய் ஊராட்சியில் அமைந் துள்ள அரசு மதுபானக் கடையை அப்புறப்ப டுத்த கிராம சபைகளில் தீர்மானம் நிறை வேற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பல முறை மனு தரப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டி, இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பாரதிபுரம் பகுதியில் 2016ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளுக்கான இடத்தை உடனடியாக அளவீடு செய்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும், வள் ளுவர் நகர் பகுதியில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வரும் 30க்கும் அதிகமான பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும், எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள பட்டா பிரச்சனைகள் மீது உடனடி யாக கவனம் செலுத்தி பட்டா பெயர் மாறு தல் செய்து தர வேண்டும், காலி இடத்தில் குடியிருப்பவர்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கள ஆய்வு செய்து உடனே வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஊராட்சி முழுவதிலும் இருந்து பல் வேறு கட்சியினரும், பொது மக்களும் நூற் றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இடுவாய் ஊராட்சியை சேர்ந்த 103 பய னாளிகளுக்கு 13 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் மனு அளித்தனர். முடிவாக வட்டாட்சியர் நன்றி கூறினார்