திருப்பூர், ஜன.10- கோவையில் பெரியார் சிலை அவம திப்பு செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட வர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதி யில் உள்ள பெரியார் சிலை மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டும், செருப்பு மாலை அணிவித்தும் அவமதிப்பு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப் பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நி லையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரே திராவிடர் தமிழர் கட்சியினர் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், பெரியார் சிலையை அவம தித்தவர்கள் மீது நடவடிகை எடுக்க கோரி தாராபுரம் அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. திராவிடர் கழக நிர்வாகி சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெரியார் சிலையை அவமதிப்பது தொடர்ந்து வரு வதை தடுத்து நிறுத்தக்கோரியும், உடனடி யாக பெரியார் சிலையை அவமதித்தவர் களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் முழங்கி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முத்து, திராவிடர் கழக நிர்வாகி அழகப்பன், தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி ஒண்டிவீரன் மற் றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அரசி யல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.