districts

ஆளுநரை கண்டித்து மக்களே போராட்டம் நடத்துவார்கள்: முத்தரசன்

ஈரோடு, ஆக.23- தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய் யும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக மக்களே வீதியில் இறங்கி போராட் டத்தில் ஈடுபடுவார்கள் என சிபிஐ மாநிலச்  செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். ஈரோட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், செய்தி யாளர்களிடம் பேசுகையில், ஒரு பீப்பாய் எண்ணெய் 112 டாலராக இருந்தபோது உள்ள  விலையே தற்போதும் நீடிக்கிறது. ரஷ்யா –  உக்ரைன் போர் சூழலில் கூட, ஒரு பீப்பாய்  77 டாலருக்கு கிடைக்கிறது. ஆனால் பெட் ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இதனால்தான், நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது. பிரதமர் மோடி எப்போதும், ஊழல், குடும்ப அரசியல் என்பதையே, 10 ஆண்டாக  பேசி வருகிறார். அவர் செய்த திட்டம் பற்றி  பேச இயலாதவராக உள்ளார். சிஏஜி வெளியிட்ட தகவலின்படி, ஒன்றிய  மோடி அரசு பல கோடி ரூபாய் மதிப்பில்  ஊழல் செய்துள்ளது. இதை கண்டித்து செப். 12ல் அனைத்து மாவட்டத் தலைநகரிலும், 13, 14ல் நகர, ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம்  செய்கிறோம். ஆளுநர் ரவி, தமிழக அரசுக்கு எதிராக அரசியல் செய்கிறார். டி.என்.பி.எஸ்.சி.,  தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் நியம னத்தை திரும்ப அனுப்புகிறார். டி.என்.பி. எஸ்.சி.,யில் தலைவர் நியமிக்கப்பட்டால் தான், தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பை பெறுவார்கள். இவரைப்பற்றி, ஜனாதிபதியிடம் தமிழக எம்.பி.,க்கள் புகார் மனு வழங்கியும், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆளுநரை கண் டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தி வரு கின்றனர். விரைவில் மக்களே போராட்டம் நடத்துவார்கள். கர்நாடகா மாநிலம், அணை நிரம்பும் போது தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து வடிகாலாக மட்டும் பயன்படுத்தாமல், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்க வேண்டும். வறட்சி காலத்தில் எவ்வாறு தண்ணீர் வழங்க வேண்டும் என வழி காட்டி  உள்ளதோ, அதன்படி தண்ணீர் வழங்க முன் வர வேண்டும் என்றார்.  இந்த பேட்டியின்போது, சட்டமன்ற உறுப் பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் பெரியசாமி, மாவட்டச் செய லாளர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந் தனர்.