districts

img

பழுதடைந்த சிசிடிவியை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.28- பாலக்கோடு நகரில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிக ளில் கொள்ளை சம்பவம் அடிக்கடி நடை பெற்று வந்தது. இதனை தடுக்க வணிக நிறுவனங்களின் மூலம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம், பெல்ரம்பட்டி சாலை, காவல் நிலையம், தக்காளி மண்டி, வட் டாட்சியர் அலுவலகம், புறவழிச்சாலை, 4 ரோடு உள்ளிட்ட பொதுமக்கள் அதி கம் கூடும் பகுதிகளிலும், போக்குவ ரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத் தார். தற்போது இந்த கேமராக்கள் பழு தாகியும், தலைகீழாக தொங்கிபடியும் காட்சி பொருளாகி உள்ளது. மேலும்  நகரத்தில் திருட்டு, கொள்ளை, போக்கு வரத்து நெரிசல், வாகன விபத்து உள் ளிட்டவைகளை கண்டறியும் வகையில் முழு கட்டுப்பாட்டு அறை பாலக்கோடு காவல் நிலையத்தில் அமைக்கப்பட் டது. தற்போது கண்காணிப்பு கேம ராக்கள் பழுதடைந்துள்ளதால் திருட்டு சம் பவங்கள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மாவட்ட நிர்வாகம் செயலிழந்த கண் காணிப்பு கேமராக்களை சரி செய்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.