தருமபுரி நவ-14, கழிவுநீர் கால்வாயை சீரமைத்திட வலியுறுத்தி தருமபு ரியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி நகராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளி பேட்டை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வழியாக ஏ.கொல்லப்பட்டி, மொடக்கேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல மக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலை யில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழமை யான வீடுகள் என்பதால், கழிவு நீர் கால்வாய் உயரமாக வும், வீடுகள் கால்வாயை விட தாழ்வாக இருக்கிறது. தற்பொ ழுது இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அகலப்ப டுத்தும் பணியை நகராட்சி மேற்கொண்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய் உயரம் அதிகரித்தால், வீடுகளின் தரைதளம் தாழ்வாக இருக்கும். மழை நீர் வீட்டிற்குள் நுழை யும் ஆபத்து உள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய் விரி வாக்க பணியை மேற்கொள்ள வேண்டாம் என கிராம மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு கொடுத் துள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கழிவு நீர் கால்வாய் விரிவாக்க பணி மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து, திடீரென ஏ.கொல்லஹள்ளி, மொடக் கேரி செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனையறிந்த நகராட்சி நிர்வாக ஆணையர் புவனேஸ் வரன், வட்டாட்சியர் சரவணன்(பொறுப்பு), காவல்துறை ஆய்வாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.