தருமபுரி, மே 27 – தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பெலமாரனஹள்ளி ஊராட்சி, கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மக்களின் குடி நீர் தாகத்தைத் தீர்க்கா மல் காட்சிப் பொரு ளாகவே நிற்கிறது. ஒகே னக்கல் குடிநீர் கிடைக் காததால், கோடைக்கா லத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளா கியுள்ளனர். கிருஷ்ணன்கொட்டாய் கிராமத்தில் 100க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்க ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படும் என்ற அறிவிப் புடன், மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் ரு.8.04 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டி கட்டி முடிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், தற்போது வரை ஒகேனக்கல் குடிநீர் வர வில்லை. இதனால், இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள் ளது. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஒகேனக் கல் குடிநீர் வழங்கக் கோரி பலமுறை தனி அலுவலரி டம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு, கிருஷ்ணன்கொட்டாய் கிராம மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.