districts

img

ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கம்

ஈரோடு, டிச.17- ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு, நாமக் கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற சிறப்பு கருத்த ரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஓய்வூதியர் தின சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. இக்கருத்தரங் கிற்கு கூட்டமைப்பின் தலை வர் வ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் துணை பொதுச்செயலாளர் பி.செல்வராசன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளன செயல் தலைவர்  எம்.துரைபாண்டியன் நிறைவுரையாற்றி னார். இறுதியாக மின்வாரிய ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் மாவட்டப் பொருளா ளர் எம்.லோகுசாமி நன்றி கூறினார். இதில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்ட னர். நாமக்கல் இதேபோன்று மத்திய, மாநில அரசு மற் றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக் கல் உழவர் சந்தை அருகே அமைந்துள்ள கிஷோர் திருமண மண்டபத்தில் ஓய்வூதியர் தின விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற் றது. ஓய்வூதியர் சங்க தலைவர் பி.கே.ராம சாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக்குழு மாநிலச் செய லாளர் பி.மகேஷ்வரி, மாவட்டச் செயலாளர் குப்புசாமி துவக்க உரையாற்றினார். போக்கு வரத்து ஓய்வூதியர் அமைப்பின் மண்டல தலைவர் என்.பழனிவேல், செயலாளர் எம்.காளியப்பன் உட்பட 200க்கும் மேற்பட்ட ஓய் வூதியர்கள் கலந்து கொண்டனர்.