districts

தென்னை மரப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் கருவி வெளிச்சந்தையில் ரூ.600; வேளாண்மை துறை மானியத்தில் ரூ.952!

திருப்பூர், பிப்.23 -  திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரப் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கருவி  வெளிச்சந்தையில் ரூ.600க்கு விற்பனை ஆகி றது. ஆனால் இதே கருவியை தமிழக அரசின்  50 சதவிகித மானியத்துடன் சேர்த்து வேளாண்மைத் துறை மூலம் விவசாயிக ளுக்கு தருவதற்கு ரூ.952 என விலை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி உள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள்  சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூத னன் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத் தில் 52 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார்  90 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தென்னை மரங்களில் ஆறு மாத காலமாக காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூண்  வண்டுகளின் தாக்குதல் அதிக அளவு உள் ளது. இந்த வண்டுகள் தென்னை குருத்து களை துளையிட்டு சேதப்படுத்தி, தென்னை  மரங்களை அடியோடு பட்டுப் போகச் செய்கி றது.  திருப்பூர் மாவட்ட த்தில் உள்ள 13 ஒன்றி யங்களிலும் உள்ள வேளாண்மை துறை மூலம் வண்டுகளை அழிக்க காண்டாமிருக இனக்கவர்ச்சி பொறி வழங்கப்பட்டு வருகி றது. வண்டுகளை அழிக்க ஒரு ஹெக்டே ருக்கு ஐந்து இனக் கவர்ச்சி பொறிகளை வைக்க வேளாண்மை துறை பரிந்துரை செய் துள்ளனர். அதற்கு தமிழ்நாடு அரசு மானியத் தில் வேளாண்மை துறையினர், சென்னை அண்ணா நகரில் கிரினிகான் அக்ரோடெக் என்ற நிறுவனத்திடம் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு 1500 இனக்கவர்ச்சி பொறி களை கொள்முதல் செய்துள்ளதாக தெரிய  வருகிறது. 

இனக்கவர்ச்சி பொறிகளை தென்னை விவசாயிகளுக்கு 50 சதவித மானிய விலை யில் வழங்கி வருகின்றனர். ஆனால் இனக்க வர்ச்சி பொறிகளுடன் மருந்து இரண்டு பாக் கெட்டும் மிகவும் லேசான பிளாஸ்டிக் பக்கெட்  ஒன்றும் சேர்த்து ரூ. 1400 மற்றும் ஜி எஸ் டி 18  சதவிகிதம் (ரூ252) உட்பட ரூ. 1652 என விலை  நிர்ணயம் செய்து உள்ளனர். அதன்படி  வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு  50 சதவிகித மானிய விலையில் இனக்கவர்ச்சி  பொறியினை வழங்கும்போது ரூ.1400இல் இருந்து 50 சதவிகித மானியம் போக ரூ.700  என தெரிவித்து, ஜிஎஸ்டி18 சதவிகிதம் (ரூ.  252) சேர்த்து மொத்தம் ரூ.952 என்று நிர்ண யம் செய்து விற்பனை செய்கின்றனர்.ஆனால், தனியார் உரக்கடைகளில் மேற்படி  இனக்கவர்ச்சி இரண்டு பாக்கெட் மருந்தின் விலை ரூ. 225 மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்  ஒன்றின் விலை ரூ.150 உட்பட மொத்தம் ரூ.375க்கு விற்பனை செய்யப்பட்டு வருகி றது. அரசு வேளாண் துறையில் வழங்குவது  போல இரண்டு பாக்கெட் மருந்து மற்றும்  ஓரளவுக்கு தரமான பிளாஸ்டிக் பக்கெட் விலையை வெளிமார்க்கெட்டில் உரக்கடைக ளில் விற்கப்படும் விலையுடன் ஒப்பீடு செய்து பார்க்கும்போது, வெளிமார்க்கெட்டில் உள்ள உரக்கடைகளில் இரண்டு பாக்கெட் மருந்து ரூ.550 மற்றும் ஒரு பக்கெட் ரூ.150 என மொத்த அடக்க விலை ரூ.600 -க்கு கிடைக்கிறது.

ஆனால், தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மூலம் தென்னை விவசாயிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் இனக்கவர்ச்சி பொறிகள் வழங்குவதாக கூறி வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் விலையை விட  ரூ.352 கூடுதல் விலைக்கு விற்பனை செய் வது, மானியம் எனச் சொல்லி விவசாயிகளை  ஏமாற்றும் செயலாக உள்ளது. இதனால் விவ சாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை அதி ருப்தி அடைந்துள்ளனர்.  வேளாண்மை துறை  மூலம் தென்னை விவசாயிகளுக்கு வழங் கப்பட உள்ள இனக்கவர்ச்சி பொறி பாக்கெட்  மற்றும் மருந்து தரமற்றதாகவே உள்ளது.  கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளது என்பது வெளிப்படையாக தெரி கிறது.  எனவே, தரமற்ற பொருட்களை கொள்மு தல் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்  மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறும், எதிர்வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல்தடுக்கவும், தரமான பொருட்கள் விவசாயிகளுக்கு கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும் என  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கேட்டுக் கொண்டார்.