நாமக்கல், ஜூலை 20- நாமக்கல் மாவட்டம், செவ்வந்திப்பட்டியில் இருந்து மலைப்பட்டிக்கு பேருந்து வசதி கோரி மாவட்ட வருவாய் அலுவல ரிடம் மாணவர்கள், பெற் றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி ஒன்றியம், செவ்வந்திப்பட்டி ஊராட்சியில் மலைப்பட்டி, பெரியசிந்தம் பட்டி ஆகிய ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக்குச் செல்வ தற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். செவ்வந்திப்பட்டி கிராமத்திற்கு நாமக்கல்லில் இருந்து இரண்டு பேருந்துகள் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி நேரத்தில் இயக்க வேண்டும். மேலும், மழைக்காலங்கள், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர்களுடன் திரண்டு வந்த பெற்ந றோர்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவ லர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.