districts

img

ஈரோட்டில் பாராகிளைடிங் பயிற்சி

ஈரோடு, ஜன. 8- ஈரோட்டில் முதல்மு றையாக மாணவர்களுக்கு பாராகிளைடிங் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தி யில் பாராகிளைடிங் விளை யாட்டு தொடர்பான விழிப்பு ணர்வு மற்றும் புரிதலை மேம் படுத்தி பல பாராகிளைடிங் வீரர்களை உருவாக்கும் நிகழ்ச்சி ஈரோடு, கருங்கல் பாளையத்தில் நடைபெற்றது.  இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற னர். இதனைத்தொடர்ந்து, கோவையி லிருந்து பயிற்சி அளிக்க வந்திருந்த கோகுல் என்பவர் கூறுகையில், முதலில் மை தானப் பயிற்சி அளிக்கப்படும். மைதானப் பயிற்சி என்றால் சைக்கிள் ஓட்டும்போது பேலன்ஸ் செய்வது போன்றதுதான். அதன்  பிறகு பறப்பது. பறப்பதற்கு புனே தான்  செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் பறப்ப தற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், அதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை 7 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். மைதான அளவிலான பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. பலர் ஒரு கட்ட பயிற்சி மட்டுமே முடித்துவிட்டு பாதியில் செல்கின்றனர். அவர்களால் அடுத்த கட்ட பயிற்சியைத் தொடர முடியவில்லை. ஏனெனில், தமிழ்நாட்டில் பறப்பதற்கான அனுமதியில்லை. தமிழ்நாட் டிலும் அதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இங்கேயும் பறப்பதற்கான பயிற்சியை அளிக்க முடியும். அதற்கான அனுமதி மட்டும் வசதிகளை வைத்திருந்தால் மற்ற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டை நோக்கி வருவர். பாராகிளைடிங்கைவிட சிறந்த வான்வெளி விளையாட்டு எதுவும் இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 15 முதல் மே 15 வரையிலான பருவகாலம் பறப்பதற்கான உகந்த காலம் என அவர் கூறினார்.