தாராபுரம், ஜன.28- திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட் டுள்ளது. 73 ஆவது குடியரசு தின விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 2019, 2020 ஆம் ஆண்டின் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் வினித் பள்ளியின் தலைமையா சிரியை வி.கல்பனாவிற்கு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து தலைமையாசிரியை வி.கல்பனா கூறியதாவது, கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 93 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்றுத்தரப்படுகிறது.மேலும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஓவியம், பேச்சு, விளையாட்டு போட்டி கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டு பள்ளி களுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுகின்ற னர். இதன் விளைவாக விளையாட்டு போட்டிகளில் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பல் வேறு பரிசுகளை பெற்றுள்ளனர். இங்கு பயின்று மேல்வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப் பெண்கள் பெறுவது பெருமை யளிக்கிறது.மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் நலன் கருதி இல்லம் தேடி கல்வி திட்டத்தின் வாயிலாக 9 மையங்க ளில் தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக இல்லம் தேடிச்சென்று கல்வி கற்பிக்கப்படு கிறது என்றார்.