சேலம், பிப்.16- பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஊதிய மாற்ற பிரச்சனைக்கு உட னடியாக தீர்வு காண வேண்டும். கால தாமதம் செய்யாமல் ஊதிய தேக்க நிலை பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவ னத்தை பலவீனப்படுத்தக் கூடாது. 4ஜி, 5ஜி சேவைகள் உடனடியாக துவங்குவதை உறுதி செய்ய வேண் டும். ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கையை உருவாக்க வேண்டும். மனிதவள சீரமைப்பை மறு பரிசீலனை செய்து இலாக்கா தேர்வுகளில் காலிப்பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும். பிஎஸ் என்எல் நிறுவனத்தில் தனியார் பங்க ளிப்பு பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக தீர்த்து வைக்க வேண் டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்த ரப்படுத்தி இஎஸ்ஐ, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். நான்கு தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு களை திரும்ப பெற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் ஒப் பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் மதியழ கன் தலைமை வசித்தார். இதில் ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ஹரி ஹரன், உதவித்தலைவர் ராஜன், சீனி வாசன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வம், துணைச்செயலாளர் செல்வம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.