districts

img

கிராமப்புறப் பகுதியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பிடிஒ அலுவலகம் முற்றுகை தருமபுரி, ஜன.3- கிராமப்புறப் பகுதிகளை பென்னா கரம் பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வட் டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள பென் னாகரம் பேரூராட்சி விரிவாக்கம் என்ற பெயரில், கிராமப்புறப் பகுதிகளை பேரூராட்சியோடு இணைக்கும் அரசா ணையை தமிழக அரசு வெளியிட்டுள் ளது. அதன்படி, பருவதனஹள்ளி ஊராட்சியைச் சேர்ந்த எட்டிக்குட்டை, ஏறங்காடு, காட்டுக்கொள்ளை, புங்கம் பள்ளம், காட்டம்பட்டி, நாய்குட்டை, அண்ணாநகர் கள்ளிபுரம் (கிழக்கு) மற்றும் மேற்கு உள்ளிட்ட குக்கிராமங் களை பேரூராட்சியுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறப் பகுதிகளுக்கு அரசு தற்போது வரை வழங்கிய, 100  நாள் வேலைவாய்ப்பு திட்டம் பறிக்கப் படும். மேலும், சொத்து வரி உயர்வு,  தண்ணீர் வரி உயர்வு போன்ற சிர மங்களுக்கு பொதுமக்கள் ஆளாவார் கள். எனவே, கிராமங்களை பேரூ ராட்சியுடன் இணைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, பருவதனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள், பென் னாகரம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். இதன்பின் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் மனு அளித்தனர். மனுவை  பெற்றுக் கொண்டு, உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளி நாதன் தெரிவித்தார். அரசாணையை ரத்து செய்யவிட்டால், அனைத்து கிராம மக்களும் மிகப்பெரிய அளவில் அணி திரண்டு அடுத்த கட்ட போராட்டத்தை நடத்துவோம், என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.