districts

img

சேலம் சிறைச்சாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கென காப்பகம் திறப்பு

சேலம், அக்.8- சேலம் மத்திய சிறைச்சாலை பணியாளர் களின் குழந்தைகளுக்கென காப்பகம் மற் றும் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறைச்சாலையில் 300க்கும் மேற்பட்ட சிறை பணியாளர்கள் உள் ளனர். இவர்களின் வசதிக்காகவும், அவர்க ளுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் மேம் பாட்டிற்காகவும் சிறைத்துறை சார்பில் பல் வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பயன் பெறும் வகையில் நூலகம், உடற்பயிற்சி மையம் ஆகியவை தொடங்கப்பட்டன. இந் நிலையில், சிறை குடியிருப்பு வளாகத்தில் புதிதாக சிறை பணியாளர் குழந்தைகளுக் கான சிறப்பு கல்வி நிலையம், பகல் காப்ப கம், சிறை பணியாளர் குடியிருப்பு மருத்துவ மனை மற்றும் அரசு போட்டி தேர்வு மையம் ஆகியவை சிறைத்துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் (பொ) வினோத் கலந்து கொண்டு, குழந்தைகள் காப்பகம், மருத்துமவனையை திறந்து வைத்தார். இதன்பின் அவர் கூறுகையில், சிறைத் துறை சார்பில் தற்போது சிறை பணியாளர் களின் குழந்தைகளுக்கு பகல் காப்பகம், மருத்துவமனை, போட்டி தேர்வு மையம், சிறப்பு கல்வி மையம் தெடங்கப்பட்டுள்ளது. கணவன் - மனைவி பணிக்கு சென்ற நிலை யில், குழந்தைகளை கவனிப்பதற்காக குழந் தைகள் காப்பகமும், சிறைப் பணியாளர்கள் குழந்தைகள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் அதிக மதிப்பெண் பெறுவ தற்கு இலவச சிறப்பு டியூஷன் சென்டர்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் படித்து பயன் பெறலாம். மேலும் சிறை பணி யாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவ சர சிகிச்சைக்கு பயன்படுத்தும் வகையில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக பயன்படுத் திக் கொள்ளலாம், என்றார். இந்நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர்  கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற சிறை பணியா ளர்கள், சிறை ஊழியர்கள், வார்டன்கள், உற வினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.