சேலம், டிச.22- திருவாக்கவுண்டனூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், திருவாக்கவுண்டனூர், வேடிகவுண் டர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் கட் டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இந்நிலையில், மேச் சேரியில் தனது தங்கையின் கணவர் உயிரிழந்த துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து ரங்கநாதன் ஆம்னி வேன் மூலம் தனது உறவினர்களை அழைத்து செல்வ தற்காக திருவாக்வுண்டனூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது காரின் எஞ்சின் பகுதி யில் திடீரென புகை வருவதை அவ்வழியாக வந்த பாதசாரி கள் ரங்கநாதனிடம் கூறியதையடுத்து, அவர் வேனிலி ருந்து கீழே இறங்கி உயிர் தப்பினார். தொடர்ந்து வேன் முழுவதுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாக அணைத்தனர்.