திருவனந்தபுரம், டிச.19- கேரளத்தில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண் ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பதாக சனியன்று அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயது, 44 வயதுடைய இருவர், மலப் புரத்தைச் சேர்ந்த ஒருவர் (37), திருச் சூரைச் சேர்ந்த ஒருவர் (49) ஆகி யோருக்கு புதிதாக ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து திருவனந்தபுரம் வந்த 17 வயது சிறுவன் துனிசியாவில் இருந் தும், 44 வயதுடையவர் தான்சானியா வில் இருந்தும், மலப்புரம், திருச் சூரைச் சேர்ந்த இருவர் கென்யாவில் இருந்தும் வந்தவர்கள். ஒன்றிய அர சின் வழிகாட்டுதலின்படி கென்யாவும் துனிசியாவும் அதிக ஆபத்துள்ள நாடு களில் சேர்க்கப்படவில்லை. எனவே, அவர்கள் தங்களை சுய கவனிப்பில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது தந்தை, தாய் மற் றும் சகோதரியுடன் இங்கிலாந்தில் இருந்து டிசம்பர் 9ஆம் தேதி திரு வனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்தார். தொடர்பு பட்டியலில் பாட்டி யும் உள்ளார். அவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ளனர். திருவனந்த புரம் விமான நிலையம் வழியாக வந்த 44 வயதானவர், டிசம்பர் 15 ஆம் தேதி விமானத்தில் வந்துள்ளார். தான் சானியா அதிக ஆபத்துள்ள நாடாக இல்லாததால், விமான நிலையத்தில் ரேண்டம் சோதனைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
சோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தது. மலப்புறத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர் தெற்கு கர்நாடகாவை சேர்ந்தவர். கோழிக்கோடு விமான நிலையத்தில் டிசம்பர் 13 அன்று வந்த அவருக்கு சோதனையில் நேர்மறை ஆனதால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். திருச்சூரை சேர்ந்த வர் கென்யாவிலிருந்து ஷார்ஜா வழி யாக டிசம்பர் 12ஆம் தேதி கொச்சிக்கு வந்தார். கென்யா அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படா ததால் அவர் சுய கண்காணிப்புக்கு அனுமதிக்கப்பட்டார். 13ஆம் தேதி பரிசோதித்தபோது, கோவிட் தொற்று இருந்தது. முதன்மை தொடர்பு பட்டி யலில் தாய் மட்டுமே உள்ளார். அம்மா வுக்கும் கோவிட் இருந்தது. கோவிட் தொற்று இருப்பதைத் தொடர்ந்து, அவர்களின் மாதிரிகள் மர பணு சோதனைக்காக ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மையத்திற்கு அனுப்பப்பட்டன. அதில், அவர்க ளுக்கு ஓமைக்ரான் உறுதிப்படுத்தப் பட்டது. இதன் மூலம், ஒமைக்ரான் இதுவரை 11 பேரிடம் உறுதிப்படுத்தி யுள்ளது. அதிக ஆபத்து இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்கள், ஒமைக்ரான் உறுதிப்படுத்தப்பட்டால் சுய கண்காணிப்பு நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்கள் 14 நாட்களுக்கு பொது இடங்களுக்குச் செல்லவோ, கூட்ட நெரிசலில் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்பட மாட் டார்கள், என்றார் அமைச்சர்.