தருமபுரி, பிப்.23- ஏரியூர் அருகே செல்லமுடி பகுதி யில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீரை முறையாக விநியோகம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி 50க்கும் மேற் பட்ட கிராமமக்கள் காலிக்குடங்களு டன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே செல்லமுடி, வடிவேல் கவுண் டனூர் ஆகிய இரு கிராமப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு களுக்கு செல்லமுடி பகுதியிலிருந்து ஆழ்துளை கிணற்றின் மூலம் நாள் தோறும் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வந்தது. கோடைக்காலம் துவங் கும் முன்பே வறட்சி நிலவி வரும் நிலையில், செல்லமுடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் நீரின் அளவு குறைந்துள் ளது. மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த கிரா மங்களுக்கு குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வரும் நிலையில், போது மான குடிநீர் கிடைக்காததால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு குறித்து கிராமமக்கள் பலமுறை அதி காரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த மூன்று நாட்களாக மிகுந்த குடிநீர் தட்டுப் பாடு நிலவி வருவதாக தெரிவித்து ஏரியூர் - மேச்சேரி செல்லும் சாலை, செல்லமுடி பேருந்து நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் திடீ ரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த மஞ்சாரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக் கம், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் விமலன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அதில் செல்லமுடி, வடிவேல் கவுண்டனூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்குள் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.