districts

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

மேட்டுப்பாளையம், நவ.28- மேட்டுப்பாளையம் அருகே நடக் கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், பெற் றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அறிவுரை வழங்கினர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் இருந்தபடி படித்து வருகிறார். இந்நிலையில், சிறுமிக் கும், அதேபகுதியைச் சேர்ந்த பேக் கரி கடை நடத்தி வரும் 27 வயது வாலி பருக்கும் திருமணம் செய்து வைக்க  பெற்றோர் முடிவு செய்தனர். அதன் படி 2 வீட்டு பெற்றோரும் பேசி முடி வெடுத்து, திருமணம் நடத்தலாம் என  முடிவு செய்தனர். இதையடுத்து திரு மணத்திற்கான ஏற்பாடுகளை 2 வீட்டா ரும் செய்து வந்தனர். இந்நிலையில், 17 வயதிலேயே சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக, கார மடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலு வலரான அமராவதிக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து அவர் இதுகுறித்து  மேட்டுப்பாளையம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகாரளித் தார். அதன்பேரில் காவல் ஆய்வா ளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் யாசர், காரமடை ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் அமராவதி, குழந் தைகள் நல உதவி மைய அலுவலர் கல்பனா ஆகியோர் திருமணம் நடை பெறுவதாக இருந்த மண்படத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சிறுமிக்கும், வாலிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தது. உடனடி யாக போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அதனை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற் றோரை அழைத்து விசாரித்தனர். அப் போது சிறுமிக்கு 17 வயதுதான் ஆகி றது. அதற்குள் எப்படி திருமணம் செய்யலாம். 18 வயது முடிந்த பிறகே  திருமணம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி யின் பெற்றோர் தற்போது நிச்சய தார்த்தம் மட்டுமே நடந்துள்ளதாக வும், சிறுமிக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்து வைக்க உள்ள தாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள், இதுபோன்று செய்யக் கூடாது என 2 வீட்டு பெற்றோருக்கும் அறிவுரை வழங்கி சென்றனர்.