நாமக்கல், மார்ச் 2- கல்குவாரி தொடர்பான அளவீடு சான்று கேட்டு, எலச்சிபாளையம் அருகே விவசா யிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், அரசு அதிகாரிகள் உரிய சான்றுகளை வழங்கினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை கிராமம், எளையாம்பாளையத் தில் 5 கல்குவாரியில் சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வருவதாக அப்பகுதி விவசாயிகள், கடந்த நான்கு வருடங்களாக போராடி வரு கின்றனர். இந்நிலையில், வருவாய் துறை யின் நில அளவையர் மூலம் வரைபடம் ஒன்று கடந்த பிப்.16 ஆம் தேதி வழங்கப்பட்டது. இதன்பின் அதற்கான அளவீடு சான்றுகள் வழங்காமல் கிடப்பில் போட்டது. இதனால் ஆவேசமடைந்த எளையம்பாளையம் விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக் கும், குவாரிக்களுக்கும் இடையே உள்ள அளவு சான்று அறிக்கைகள் வழங்க வேண் டும் என வலியுறுத்தி காத்திருக்கும் போராட் டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, திருச்செங்கோடு நில அளவை துறையினர் அளவீடு சான்றுகளை வழங்கியதால் நடைபெற இருந்த காத்தி ருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது என போராட்ட ஒருங்கி ணைப்பு குழுவினுடைய தலைவர் பழனி வேல் தெரிவித்துள்ளார். முன்னதாக, இப் போராட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சுழல் பாது காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ர.ச.முகி லன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியக் கவுன்சிலர் சுரேஷ், லத்துவாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூசன் மற்றும் விவ சாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.