கோவை, பிப். 9- கீழடியின் இந்தத் தேடுதலும் தோண்டு தலும் யாரையோ அச்சுறுத்துகிறது. அதுதான் ஒரு வகையில் எங்களுக்கு உற்சாகமாகமும் இருந்தது என ஒடிசா மாநில முதன்மை ஆலோ சகர் ஆர்.பாலகிருஷ்ணன் கோவை கருத்தரங் கில் உரையாற்றினார். கோவை மாவட்டம், பேரூர் சாந்தலிங்க அடி களார் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரியின் தமிழ்த் துறை, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றின் சார்பில் சிந்து முதல் பொருநை வரை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளி யன்று, நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு புகைப்பட கண்காட் சியை கல்லூரியின் செயலர் சி.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் கா.திருநாவுக்கரசு வரவேற்றார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிக ளார் வாழ்த்தி பேசினார். வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் நோக் கங்கள் குறித்து வரலாற்றுப் பாதுகாப்பு இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ. கருணானந்தம் உரையாற்றினார். கொற்கை, கொடுமணல், கீழடி தொல்பொருள் அகழாய்வு கள் குறித்து இந்திய தொல்லியல் ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்புரையாற்றி னார். இதனைத்தொடர்ந்து, ஒடிசா மாநில முதன்மை ஆலோசகரும், எழுத்தாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசுகையில், நாங்கள் இணக்கத்தை விரும்புபவர்கள். வெறுப்பு ணர்வை விரும்பாதவர்கள், நாங்கள் கருத்தி யலில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் தான் வந்தேறிகள், புலம்பெயர்ந்தவர்கள் என்று சொல்வதில் உடன்பாடில்லாமல் இருக்கி றோம். ஏனெனில் இந்த பூமியே வந்தேறிகளால் வசிக்கப்படும் இடம்தான். ஆதிகாலத்தில் குகைகளில் இருந்த மனி தர்கள் அங்கேயே இருந்தார்கள். அங்கிருந்து நகர்ந்து வந்தவர்கள்தான் நாகரிகம் படைத்தார் கள். பூமியில் மனித இனம் 2 லட்சம் ஆண்டு களாக வசித்து வருகிறது. உலகில் சிறப்பான நாகரிகம் நகர நாகரிகம்தான். மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்கள் புகழ் பெற்றது இத னால்தான். இன்றிலிருந்து சுமார் 4,500 ஆண்டு களுக்கு முன்பு மொகஞ்சதாரோவில் ஒரு அழ கான பெண்ணின் உலோக சிலை வடிவமைக் கப்பட்டுள்ளது. சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் பிரமிடு கட்டப்பட்டதை விட பெரிய விஷயம் இதுதான். அத்துடன் சிந்துவெளி நாகரிகத்தில் கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் இல்லை, பிரமிடுகளும் இல்லை. ஆனால் கழிப்பிடம், குளிக்கும் இடம், குப்பைத் தொட்டிகள் இருந் தன. அரசாள்பவர்கள் வாழும் இடம், வணி கர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், பொது மக்கள் வாழ்ந்த இடம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்ட நகரங்கள் சிந்து சமவெளி நாக ரிகம் முழுவதும் இருந்தது. கீழடி ஆய்வுகள் வெளியான பிறகு 2019 இல் நாடாளுமன்றத்தில் சரஸ்வதி பண்பாடு இருந்ததாகப் பேசப்பட்டது. அதற்கான கார ணத்தை நாம் ஆராய வேண்டும். எனவே தரவு களால் வரலாற்றைக் கட்டமைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டுக்கதைகள் வரலாறு என்ற பெயரில் நம் மீது கட்டவிழ்த்துவிடப்படும். மக்க ளின் வரலாறே வரலாறு. மற்றவையெல்லாம் வரப்புத் தகராறுகள்தான். அரசுகள், மன்னர்கள் வருவார்கள் போவார்கள் அதெல்லாம் வர லாறு ஆகாது.
கீழடி யாரையோ அச்சுறுத்துகிறது
அதேபோல், பண்பாடு இல்லாத அரசியல் இருக்கலாம். ஆனால் அரசியல் இல்லாமல் பண்பாடு இருக்கவே முடியாது. அதனால்தான் பண்பாட்டு அரசியலைப் பேச நாங்கள் ஓடோடி வருகிறோம். கீழடி ஆய்வில் அமர்நாத் ராம கிருஷ்ணா பணியாற்றியபோது முதல் கட்ட ஆய்விலேயே அங்கு கிடைத்த பொருள்கள் எல்லாம் ஹரப்பாவில் கிடைத்தவற்றைப் போல இருக்கிறது என்று கூறினார். ஆனால், அவருடன் பணியாற்றியவர்களே அதை நம்பவில்லை. கீழடி எங்கே உள்ளது சிந்துவெளி எங்கே உள்ளது என்றனர். ஆனால் 2016 மே மாதத்தில் கீழடி அகழாய்வு குறித்து ஒரு கட்டுரை வந்தது. அமர்நாத் சொன்னபோது கண்டுகொள்ளாதவர்கள் அந்த செய்தி வெளி யான பிறகு கூர்ந்து கவனித்தனர். இதையடுத்து இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு இவரது இடத் துக்கு வந்தவர் அங்கு தோண்டுவதற்கு ஒன் றுமே இல்லை என்றார். ஆனாலும் நமது கோரிக் கைகளால் அதற்கு பிறகு கீழடி 6 முறை தோண் டப்பட்டு ஆயிரக்கணக்கான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியின் இந்தத் தேடுதலும் தோண்டு தலும் யாரையோ அச்சுறுத்துகிறது. அதுதான் ஒரு வகையில் எங்களுக்கு உற்சாகமாக இருந் தது. சரியான வழியில்தான் நாம் போகிறோம் என்பதை உறுதி செய்து கொண்டோம். சிந் துக்கு பக்கத்தில் கங்கை இருந்தும் கங்கை நாக ரிகம் என்று ஒன்று வரவில்லை. சங்க இலக்கியம் பேசுபவற்றை காட்சிப்படுத்தும் இடமாக மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளது. அங்கு கிடைத்த பொருள்களுக்கு இலக் கியம் இங்குள்ளது. சிந்து வெளியில் கிடைத்த வற்றைப் போலவே கீழடியிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. வால்கா முதல் கங்கை வரை என்ற நூலை நாம் தலையில் வைத்துக் கொண்டாடினோம். உண்மையில் அந்த நூல் எழுதப்பட்ட பிறகு கங்கை வரைதான் சிந்து வெளியைப் பற்றிய செய்திகள் வந்துவிட்டா லும் தமிழகம் பற்றியும் ஆதிச்சநல்லூர் பற்றி யும் ஒரு வார்த்தை கூட அதில் இடம்பெற வில்லை. இந்திய தொல்லியல் கழகத் தலைவர் தீட் சித் சென்னை வந்தபோது, எனது துறையைச் சேர்ந்த நண்பர்கள் யாருக்காவது வாய்ப்புக் கிடைத்தால் கொற்கை, ஆதிச்சநல்லூர், மதுரை பகுதிகளில் தோண்டினால் சிந்து வெளிக்கு சமமான அல்லது சற்று பின்தங்கிய நாகரிகம் கிடைக்கக் கூடும் என்று 1935 இல் கூறினார். அதன் பிறகு 80 ஆண்டுகள் யாரும் அந்த பகுதியில் தலை வைத்துப்படுக்க வில்லை.
தமிழர்கள் தங்கள் வரலாறை வெள்ளத்தால் பாதியையும் கள்ளத்தால் பாதியையும் இழந்து விட்டனர். தற்போது கட்டுமானங்களே இல்லாத வர்களுடன் கட்டுப்பாடற்ற ஒரு உரையாடலை வரலாறு நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் கூறும் அந்த பண்பாட்டுக்குக்கு இலக்கியமும் இல்லை; எந்த ஆதாரமும் இல்லை. கங்கை சமவெளி சிந்துவுக்கு பக்கத்தில் தான் உள்ளது, தூரம் குறைவு ஆனால் இடை வெளி அதிகம். ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் இருந்து ஆதிச்சநல்லூரும், கீழடியும், கொடு மணலும் ரொம்பவே தூரத்தில் இருக்கின்றன. ஆனால் இடைவெளி குறைவு. தூரமும் இடை வெளியும் ஒன்றுபோலத் தோன்றினாலும் வேறு வேறுதான். இந்திய துணைக்கண்டத்துக்கான பண்பாட் டுக்கு நாம்தான் உரிமை கோர வேண்டிய வர்கள். ஒட்டகம் எலும்பை சாப்பிடும் என்ற தக வல் சங்க இலக்கியத்தில் உள்ளது. ஆனால் நமது நிலப்பரப்பில் பாலைவனமே இல்லை. ஆனால் கடுமையான வறட்சிக் காலத்தில் ஒட்ட கம் எலும்பை உண்ணும் என்பது அண்மையில் பாகிஸ்தானில் உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நர்மதை நதிக்கு இந்தப் பக்கம் சிங்கம் இல்லை, ஆனால் சிங்கத்தைப் பற்றிய முழு விவரமும் சங்க கால பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தெளி வாக விளக்கி எழுதிய ஒரே நூல் சங்க இலக் கியம். குயவனை, சிற்பியை, பொற்க்கொல்லனை சமுதாயம் எப்படி நடத்துகிறது என்பதை வைத்துதான் ஒரு நாகரிகம் சிந்துவெளியுடன் தொடர்புடையதா என்பதை உறுதி செய்ய முடி கிறது. சங்க இலக்கியம் கைவினைஞர்களை தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. ஆனால் அதன் பிறகு வந்த மனு ஸ்மிருதி போன்ற நூல் களில் அவர்கள் சூத்திரர்கள் என்று பட்டம் சூட்டப்பட்டு ஒதுக்கப்பட்டனர். அதிலிருந்தே சிந்துவெளி சமுதாயம் யாருக்கானது என் பதை காண முடிகிறது. முல்லைப் பெரியாறு கட்டிய பென்னி குயிக் கிற்கு எப்படி சிலை வைத்தோமோ பொங்கல் கொண்டாடினோமோ அதேபோல் சிந்து சமவெளி நாகரிகத்தை உலகத்துக்குக் காட்டிய ஜான் மார்ஷலுக்கு ஒரு சிலை வைக்க வேண் டும். இந்திய வரலாற்றை மீட்டெடுத்த அவருக்கு பொங்கல் வைக்க வேண்டும். அப்போதுதான் நமது வரலாற்றின் குரல், உரிமை நிலை நாட்டப்படும்.
ஐஐடி கோரக்பூர் போன்ற தொழில்நுட்பக் கழகங்கள் வரலாறு பற்றி கவலை கொள் கின்றன. காலண்டர் போடும் வேலையைப் பார்க்கின்றன. அவர்களிடம் நாம் முன்னெச்ச ரிக்கையாக இயங்க வேண்டியுள்ளது. முன் எப்போதையும் விட நாம் இப்போது மிகுந்த எச்ச ரிக்கையுடன் இருக்கிறோம். முன்பு எப்போதை யும் விட இப்போது நமது வரலாறு பாதுகாப்பாக உள்ளது. முன்பெல்லாம் எதிர்த்துப் பேச ஆளில்லை. ஆனால் இப்போது அப்படிச் செய் தால் இதுபோல் கூட்டம் கூடி நமது எதிர் கருத்தைச் சொல்லிவிடுகிறோம். முன்பு நமது வரலாறு காயப்படுத்தப்பட்ட போது அதை எதிர்த்துப் பேச நாதியில்லை. குமரி முனையில் விவேகானந்தர் பாறை நிறுவப் பட்டது என்றால் அங்கு 133 அடியில் வள்ளுவரை நிறுவியதுதான் நமது எதிர்வினை. வள்ளுவரின் சிலை ஹரித்துவாருக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது எப்படி எதிர்ப்புக்குள்ளானது, அவரை கீழ் ஜாதிக்காரர் என்று சிலையை வைக்கவிட வில்லை. நமது நாட்டில் வள்ளுவன் என்றொரு சாதி உள்ளது. ஆனால் அது எந்தப் பட்டியலில் உள்ளது. வடநாட்டில் வால்மீகி என்றொரு சாதி உள்ளது அது எந்தப் பட்டியலில் உள்ளது என்பதைப் பாருங்கள். இதுதான் பண்பாட்டு அரசியல். ஆகச்சிறந்த இலக்கியங்களை எழுது பவர்கள் மீது சாயம் பூசுவோம். முடிந்தால் அவன் எங்களுக்குப் பிறந்தவன் என்று சாயம் பூசுவோம். இல்லாவிட்டால் அவருடைய அடையாளத்தை தாழ்ந்த அடையாளமாக்கி அழித்துவிடுவோம் என்பதுதான் அவர்களின் அரசியல்.
இந்தியா முழுமைக்கும் எடுத்துக் கொண் டால் கருப்பு சிவப்பு நிற மட்பாண்டம்தான் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேல் கங்கைச் சமவெளியில் மட்டும்தான் பழுப்பு நிறப் பாண்டம் தென்படுகிறது. ஒரு தீவைப் போல பகுதியில் மட்டுமே அந்த பாண்டம் உள்ளது. ஒரு தீவைப் போன்ற இடத்தில் இந்த பழுப்பு நிற பாண்டம் உள்ளது. ஆரியர் வருகை யுடன் தொடர்புடையதாக கருதப்படும் அந்தத் தீவுதான் இப்போது இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு முயற்சிக்கிறது. சங்க இலக்கியம் சொல்வதை தொல்லி யல் எச்சங்கள் நிரூபிக்கின்றன. கீழடியின் காலத்தை நகர்த்துவதற்கு யுத்தமே நடத்த வேண்டியுள்ளது. ஆனால் மகாபாரத காலம் என்று சொல்பவர்கள் சம்பந்தமே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு வர லாற்றை பின்னோக்கி நகர்த்தினார்கள், நகர்த்த முயற்சிக்கிறார்கள். இப்போது பெரும்பாலும் வரலாறு வாட்ஸ் அப்பில் தான் எழுதப்படுகிறது. வரலாறு முக்கிய மானது. தவிர்க்க முடியாதது, நாம் வரலாற்றில் இருந்து தப்பிக்க முடியாது. வரலாற்றுக்கான விழிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். நாம் அப்படிப்பட்ட அறிவுசார்ந்த மரபில் வந்தவர் கள், என்றார். இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன், எழுத்தாளர் சி.ஆர் இளங்கோவன், பேராசிரியர்கள் முத்துலட்சுமி, சேனாவரை யன், மணிமேகலை, ராசேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், த.திலீப்குமார் நன்றி கூறினார்.