districts

img

வால்பாறை தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, ஜன.27- வால்பாறை தியாகிகள் நினைவு தினம் ஞாயிறன்று சிபிஎம் மற்றும் சிஐடியுவின ரால் அனுசரிக்கப்பட்டது. கூலி உயர்வு கேட்டு 1957 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வால்பாறையில் செங் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் கொல் லப்பட்டனர். போலீசாரின் கொடூர துப்பாக் கிச்சூட்டில் உயிரிழந்த வால்பாறை தியாகி கள் அப்பாவு, ஞானமுத்து, குருசாமி, பழனி உள்ளிட்ட ஐந்து பேரின் நினைவு தினத்தை  ஒவ்வொரு ஆண்டும் செங்கொடி இயக்கம் அனுசரித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, ஞாயிறன்று வால்பாறை தியாகிகள் நினைவு தினம் ஞாயிறன்று நடைபெற்றது. அக்கா மலை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற  நினைவு தின நிகழ்விற்கு, சிபிஎம் ஆனை மலை தாலுகா குழு உறுப்பினர் பி.பரமசிவம் தலைமை ஏற்றார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுச்சாமி, சிபிஎம் ஆனைமலை தாலுகா செயலாளர், வி.எஸ்.பரமசிவம், தாலுகா குழு உறுப்பினர் கள், எம்.கனகராஜ், தங்கவேல், பவுலினா, நேதாஜி மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்  சங்க மாவட்டத்தலைவர் எம்.பரமசிவம், செய லாளர் வேளாங்கண்ணி ராஜ் மற்றும் மின்ன ரங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் திரளா னோர் பங்கேற்று, தியாகிகளின் தினத்தின் வரலாற்றை நினைவு கூர்ந்தனர்.