விழுப்புரம்,ஆக.30- தலித் மக்கள் குடி யிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று (ஆக.30) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எஸ்.பாலமுருகன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்ட செயலாளர் எம்.கே. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், இரும்பை கிராமத்தில் ஏழை தலித் மக்களின் 100 குடியிருப்புகளை புதுச்சேரி - திண்டிவனம் நான்கு வழிச்சாலைக்காக 2008 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி யது. அன்றைக்கு குடியிருப்பு களை காலி செய்ய மறுத்து போராடிய மக்களை வருவாய்த்துறை அதி காரிகள், மந்தைவெளி புறம்போக்கு நிலத்திற்கு கொண்டு சென்று தள்ளினர். பட்டா வழங்குவதற்கான கோப்புகள் தயாராகி 15 ஆண்டுகளை கடந்தும் மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. ஆனால், தலித் மக்களுக்கு தொகுப்பு திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மின்சார இணைப்பும் கிடைக்க வில்லை. வீட்டுக் கடனும் பெற முடியாமல் அல்லல் படுகிறார்கள். எனவே, 15 ஆண்டுக ளாக குடியிருக்கும் இடத்திற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். இரும்பை தலித் மக்கள் குடி யிருப்புக்குச் குடிநீர் மற்றும் சாலை வசதி செய்து தரவேண்டும். கோயில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.