சென்னை, அக்.17- சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் கோவை மாவட் டம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் எவ்வளவு அதிகமாக உள் ளதோ, அதேபோல் சாலையை கடப் பவர்களும் வேகமாக வரும் வாகனங் களில் அடிபட்டு உயிரிழக்கும் எண் ணிக்கையும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இதனை தடுக்க போக் குவரத்து காவல்துறை சார்பில் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. குறிப்பாக சாலையில் அமைக் கப்படும் வேகத்தடைகள் மிக முக்கி யமான ஒன்றாகும். சாலையில் வாக னங்கள் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மக் கள் குறிப்பிட்ட வேகத்தில் தான் செல் கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சென்னை நக ரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சென்னை நகரில் சாலை விபத்து களில் உயிரிழப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. விபத் துகளை தடுக்கும் வகையில், முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக சென் னையில் “டார்க் ஸ்பாட்” என்று அடிக் கடி விபத்துகள் நடைபெறும் இடங் கள் அடையாளம் காணப்பட்டன. பின் னர் அந்த இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகரிக்கப்பட்டது. இதனால் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடிந்தது. இவ் வாறு செய்ததின் மூலம் 80 விழுக் காட்டினர் மருத்துவமனைகளில் உயிர் பிழைத்துள்ளதாக அந்த ஆய் வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில், யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கோவை மாவட்டம் அதிக சாலை விபத்துகளில் உயிரிழக்கும் மாவட்டங்களில் முதல் இடத்தை பிடித் துள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி கோவையில் விபத்துகளும், அதில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித் துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 700 பேர் உயிரி ழந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக செங்கல்பட்டில் 585 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் சாலையை கடக்க முயன்றவர்கள் என்றும், பாதி பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.