districts

img

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்தம் : போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு

திருப்பூர், டிச.21 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்க ளில் தற்போது பணியில் உள்ள 1,25,000 தொழி லாளர்கள், பணி ஓய்வு பெற்ற 91,000 ஓய்வூதி யர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் நீண்ட  காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதை  உடனடியாக நிறைவேற்றாவிட்டால் வருகிற  ஜனவரி 5ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கழகங்களில் செயல் படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும்  ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் காங்கேயம் கிளை மேலாள ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகங் களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தி யாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி  வழங்க வேண்டும். அடிப்படை ஓய்வூதியத்தை உயர்த்தி அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். கடந்த 8  ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அகவி லைப்படி நிலுவைத் தொகையையும் வழங்க  வேண்டும். 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்த  ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை  கைவிட்டு நடைமுறையில் இருக்கும் பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண் டும். காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய  வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையைத் துவக்கி ஒப்பந்தத்தை இறுதி படுத்த வேண்டும் என பல முறை தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச்சங் கங்கள் சார்பாக அரசு அதிகாரிகள், கழக அதி காரிகளிடம் முறையீடு செய்தும் பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை. பணி ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு சம்பந் தமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தும் தீர்ப்பை  அமுல்படுத்துவதற்கு மாறாக மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கைக ளிலும் உரிய தீர்வு காணாமல் காலம் கடத்தப் பட்டு வருகிறது. எனவே இக்கோரிக்கைக ளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கா விட்டால் வருகின்ற ஜன.5 ஆம் தேதி அன்றோ  அல்லது அதற்கு பின் 6 வார காலத்திற்குள் வேலை நிறுத்தத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.