நீலகிரி தேயிலை என்பது, கருமை நிறமும் தீவிர நறுமணமும் சுவையையும் உடைய ஒரு பயிராகும். இந்த வகை தேயிலை, இந்தியத் துணைக்கண்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்குப் பகுதியில் காணப்படுகிறது. இருப்பினும், இது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி 30 சதவிகிதமாகும். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி சிறு விவசாயிகளால் மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் பொதுவாக ஒவ்வொருவரும் ஒரு ஹெக்டேருக்கு குறைவான நில உரிமையாளராக உள்ளனர். நீலகிரி தேயிலை சிறு விவசாயிகளில் பெரும் பான்மையானவர்கள் உள்ளூர் சமூகமான படகர் இனத்தவர் ஆவர். நீலகிரி தேயிலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வழக்கமாக தேநீர் பைகளுக்குப் பயன்படுத்தப்படும் கலப்புகளில் நீலகிரித் தேயிலையைக் காணலாம். மேலும் நீலகிரித் தேயிலைகள் தென்னிந்திய உற்பத்தியில் பாதிக்கும் மேலானவையாக உள்ளன. ஆரஞ்சு பெக்கோ (OP) போன்ற தேயிலை வகை விலையுயர்ந்ததாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவை சர்வதேச ஏலங்களில் மிகவும் விரும்பப்படுகின்றன.