நீலகிரி, டிச.26- உதகையில் கேரட் விலை புதிய உச் சத்தை எட்டி, சனியன்று கிலோ ஒன்று ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவ சாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக கேரட் மற்றும் உருளைக்கிழங்கு அதிக ளவு பயிரிடப்படுகிறது. தற்போது கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், காலனிமட்டம், காட்டேரி, அணிக்கொரை, எப்பநாடு, கெந்தோரை, தும்மனட்டி போன்ற பகுதிகளில் அதிக ளவு கேரட் பயிரிடப்படுகிறது. இங்கு விளை விக்கப்படும் கேரட் சென்னை, பெங்களூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக் காக கொண்டு செல்லப்படுகிறது. உதகை கேரட்டுக்கு மவுசு அதிகம் என்பதால், இங்கி ருந்து லாரிகள் மூலம் தினமும் பல ஆயிரம் டன் கேரட் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த வாரம் வரை உதகை கேரட்டிற்கு கிலோ ரூ.70 வரை கிடைத்தது. இந்நிலை யில், கேரட் விலை புதிய உச்சத்தை எட்டி யது. கிலோ ஒன்று ரூ.100 முதல் ரூ.120 வரை ஏலம் போனது. தில்லி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மார்க்கெட்டிற்கு கேரட் வரத்து குறைந்துள்ளதாலும், தொடர் மழை காரணமாக நீலகிரியில் கேரட் உற் பத்தி குறைந்து காணப்பட்டதாலும் கேரட் விலை உயர்ந்துள்ள. தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே கேரட் அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், விலை உயர்ந்துள்ளது. தற்போது விலை அதிகம் கிடைக்கும் நிலையில், நீல கிரி விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்து வெளியூர்களுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கேரட் விலை உச்சத்தில் உள்ளதால், இம்முறை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டாணி ஒன்றரை கிலோ ரூ.100க்கு விற்பனை
.100க்கு விற்பனை வெளி மாநில பட்டாணி வரத்து அதிகரித் துள்ளதால், சாலையோரங்களில் வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்படு கிறது. உதகை சுவீட் பட்டாணி மார்க்கெட் டில் சாதாரணமாக ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். இந்நிலை யில், தற்போது வெளி மாநில பட்டாணி அதி களவு உதகை மார்கெட் மற்றும் கடைக ளுக்கு வந்துள்ள நிலையில், உதகை பட் டாணி விலை சரிந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள பட்டாணி சாலையோரங்களில் வைவைத்து ஒன்றரை கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதனால், இதனை பொதுமக்கள் ஆர் வத்துடன் வாங்கி செல்கின்றனர்.