தருமபுரி, ஆக. 22- வரிகளை கறாராக வசூல் செய் யும் தடங்கம் ஊராட்சி நிர்வாகம், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்ட வில்லை குற்றம்சாட்டி தடங்கம் ஊராட்சியை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தருமபுரி நகராட்சிக்கு அருகா மையில் உள்ளது தடங்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மிகப்பெரிய வருவாய் உள்ள ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற னர். இதில் 1109 ஆதிதிராவிடர் மக்க ளும் 259 பழங்குடி இருளர் இன மக்களும் உள்ளடங்குவார்கள். இந்த ஊராட்சியில் தடங்கம் அவ்வைந கர், இருளர் கொட்டாய், ஜீவாநகர், கொத்தடிமை காலனி, நேருநகர் சவுளுப்பட்டி, சத்யாநகர், கக்கன்ஜி புரம் உள்ளிட்ட 17 வார்டுகள் உள் ளன. இந்த ஊராட்சியில் அரசு கலைக் கல்லூரி, ஒட்டப்பட்டி அவுஸ்சிங் போர்டு சிப்காட் என முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியாகும். இங்கு நடுத்தர மக்கள், அரசு ஊழியர் கள், முறைசாரா தொழிலாளர்கள், பட்டியலின பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த ஊராட் சிக்குட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை, தெருக்களுக்கு சிமென்ட் சாலை இல்லை, கழிவுநீர் கால்வாய் இல்லை, இதனால் வீட்டின் முன் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. பலர் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீரை வீட்டின் முன் தொட்டி போன்று கட்டி அதில் கழிவு நீர் தேங்குகிறது சிலநேரங்களில் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் மூலம் கொசு உறப்த்தியாகி வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர். வீட் டிற்கு காட்ட வேண்டிய வரியை மட் டும் கறாராக வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகம் எந்த வசதியும் செய்து தரு வதில்லை என வேதனையுடன் குறிப் பிட்டார். சத்யாநகர் காந்தி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் கூறுகையில், எங்கள் பகுதி அரசு ஊழியர்கள் கணிசமாக வசிக்கின்ற பகுதி. தடங் கம் ஊராட்சி நிர்வாகத்திடம் முறை யாக அனுமதி பெற்றுத் தான் நாங்கள் வீடுகட்டினோம். எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்ய வில்லை. கழிவுநீர் கால்வாய் இல்லா ததால் எங்கள் வீட்டின் முன் குழி எடுத்து அதில் கழிவுநீரை விடுகி றோம். மழைகாலத்தில் எல்லா தண்ணீரும் தெருவிலேயே தேங்கி நிற்கிறது நடக்கவே கால் கூசுகிறது. எங்கள் தெருவின் முன் தெரு பலகை வைத்தோம் விழுந்து விட்டது அதை யும் புதியதாக வைக்க வில்லை. நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறோம், எங்க ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். பெருமாள் கோயில் மேடு எம்ஜி ஆர் நகரை சேர்ந்த மாது கூறுகை யில், எங்கள் பகுதியில் உள்ள மக்கள் கூலி தொழிலாளர்கள். இங்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. நாங் கள் குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம். எங்கள் பகுதி முழுவதும் தெருசாலை மண்சாலை யாகவே உள்ளது. மழைகாலங்க ளில் சேறும்சகதியுமாக மாறிவிடு கிறது. எங்கள் பகுதிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வந்து 4 வருடங்க ளாகி விட்டது. கிராமசபை கூட்டங்க ளில் எங்கள் பிரச்சனைகளை சொன்னாலும் கண்டு கொள்வ தில்லை என தெரிவித்தார். சிபிஎம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு இந்த ஊராட்சியின் லஞ்ச முறைகேடுகளை கண்டித்தும், 1 ஆவது வார்டு தாளப்பள்ளம் கிராமத் தில் சுமார் 13 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். வறுமை கோட்டின் கீழ் வாழும் இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. ஊராட்சி யில் பல்வேறு பகுதிகளில் டேங்க் ஆப்ரேட்டர்கள் இல்லை, சத்தியா நகரில் வேகத்தடை, நிகழ்கூடம் அமைத்து தர வேண்டும். அதியமான் நகர் முதல் விநாயகர் கோயில் வரை உள்ள மண்சாலையை தார்சாலை யாக மாற்ற வேண்டும். ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியால் கால்நடை மருத் துவமனை அமைக்க வேண்டும். தடங்கம் நேதாஜி நகரில் நூலகம் அமைத்து தர வேண்டும். அனைத்து பகுதி மக்களுக்கும் நூறுநாள் வேலை வழங்க வேண்டும். தடங்கத் தில் பழுதடைந்த மயானத்தை சீரை மைக்க வேண்டும். தடங்கம் ஊராட்சி முழுவதும் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு சிமென்ட் சாலை கழிவுநீர் கால்வாய் தெரு விளக்கு அமைக்க வேண்டும் தெரு பகுதியில் உள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியி னர் இன்று தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.