districts

img

தொடரும் கனிமவள கொள்ளை: அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

உடுமலை, டிச.21-  உடுமலை ஒன்றியம், ஆண்டிய கவுண்ணூர் ஊராட்சி, பெரிசனம்பட்டி அருகே விளைநிலங்களில் கனரக வாக னங்கள் மூலம் கனிமவளங்கள் கொள்ளை யடிக்கும் சமூக விரோதிகளை அரசு நிர் வாகம் இரும்புகரம் கொண்டு அடக்க  வேண் டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் முறைகேடாக கனிம வளங்கள் கொள்ளை அடித்து வருவதை தடுக்க தவ றிய வருவாய் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கடந்த டிச.17 ஆம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மடத்துக்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப் பாட்டத்தின் எதிரொலியாக அப்பகுதியில் தற்பொழுது மண் கொள்ளை தற்காலிக மாக தடுத்து நிறுத்தப்பட்டது. அதே நேரம், இதற்கு மாற்றாக உடுமலை தாலுகா ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி பெரி சனம்பட்டி அருகே உள்ள விளைநிலத்தில் சிலர் கனரக வாகனங்களை கொண்டு  முறைகேடாக மண் எடுக்க துவங்கியுள்ள னர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பல வருடங்களுக்கு பிறகு நல்ல மலை பெய்துள்ள நிலையில் இப் பகுதியில் இயற்கையாகவே சிறிய மலைக் குன்றுகளுடன் விளைநிலங்கள் அதிகம் உள்ளது. குன்றுகளில் இருந்து வரும் மழைநீர் அருகில் உள்ள குளம், குட்டை களில் தேங்குவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

இப்படி விவசாயிகளுக்கு பயன் உள்ள விளைநிலங்களில் இருக்கும் சிறு குன்றுகளை கனரக வாகனங்களை கொண்டு உடைத்து சமூக விரோதிகள் மண் களை இரவு, பகலாக எடுத்து வருகிறார் கள். மேலும் மண் எடுக்க கனரக வாக னங்கள் வந்து செல்ல பிஏபி வாய்க்கால் கரையை பயன்படுத்துவதால், வாய்க்கால் உடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக விவசாயத்தையும், இயற்கையையும் காக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.  இதுகுறித்து, உடுமலை வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் கேட்கையில், பெரிசனம் பட்டியில் விளை நிலங்களில் வருவாய்த் துறையின் அனுமதி இல்லாமல் மண் எடுப் பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று மண் எடுப்பதை தடுத்து விசாரணை செய்து வருகிறார்கள் என்றார்.

 ஏற்கனவே இதே ஊராட்சியில் தான் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள ஜம்புக்கல் மலையின் இயற்கையை தனி நபர் அழித்து வருவாத அப்பகுதி விவசா யிகளும், விவசாய சங்கத்தினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போதுதான் கோட் டாட்சியர் அளவிலான விசாரணை நடந்து வருகிறது. ஆகவே, இதுபோன்று தொடர்ச் சியாக உடுமலை பகுதியில் இயற்கை வளங் கள் கொள்ளை போவதை தடுக்கும் வகை யில் அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும்  என்பதே இப்பகுதி விவசாயிகள் மற்றும்  பொதுமக்களின் கோரிக்கையாக உள் ளது.