districts

img

சிறப்பு தொழுகையில் நாமக்கல் எம்.பி., பங்கேற்பு

நாமக்கல், ஜூன் 17- வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற நாமக் கல் எம்.பி., பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார். இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத், நாடு முழுவதும் திங்களன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சாலை யில் உள்ள பேட்டை அஞ்சுமனே ஜாமியா பள்ளி வாசலில் இருந்து, இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று, சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை யில் ஈடுபட்டனர். இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற இந்தியா கூட்டணியின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி மாதேஸ்வரன் எம்.பி., கட்சி நிர்வாகிகளுடன் வந்து தேர்தலில் வாக்க ளித்த இஸ்லாமியர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்லாமியர்களுடன் சிறப்பு தொழுகையில் கலந்து கொண் டார். அப்போது மாதேஸ்வரன் எம்.பி., பேசுகையில், தேர்த லில் பணியாற்றிய இஸ்லாமியர்களை மறந்து விட முடியாது; என்றுமே நான் மறந்து விட மாட்டேன். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இஸ்லாமிய நண்பர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன், என்றார்.