districts

இறந்த மாட்டிற்கு ரூ.40000 இழப்பீடு

நாமக்கல், ஜன.30- இறந்த மாட்டின் உரிமையாள ருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் அருகே உள்ள சின்ன பள் ளம்பாறை கிராமத்தில் வசிப்பவர் அருள். இவரது மனைவி சிவகாமி. இவர், பள்ளம்பாறை பால் உற்பத் தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். மூன்று பால் மாடுகளை மேய்த்து தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  ஒரு மாடு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டது.  தமது மாடுகளை பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூல மாக, அரசுக்கு சொந்தமான ஒரு  காப்பீட்டு நிறுவனத்தில், சிவகாமி  காப்பீடு செய்திருந்தார். மாடு இறந்தது குறித்து சங்கத்தின் செய லாளருக்கு தகவல் தெரிவித்து, காப்பீட்டு நிறுவனத்தின் புலனாய் வாளர் முன்னிலையில் அரசு கால்நடை மருத்துவர் உடல் கூராய்வு  செய்துள்ளார். பின்னர் இறந்த மாட்டிற்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 40,000/- வழங்குமாறு காப் பீட்டு நிறுவனத்தில் சிவகாமி விண் ணப்பம் சமர்ப்பித்துள்ளார். அரசு மானிய திட்டத்தின் கீழ்  கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கு வதாகவும், ஒரு குடும்பத்தில் ஐந்து  கால்நடைகளுக்கு மேல் இந்த திட்டத் தில் காப்பீடு செய்ய முடியாது என வும், சிவகாமியின் பெயரில் மூன்று  மாடுகளுக்கும், சிவகாமியின் கண வரின் பெயரில் நான்கு மாடுக ளுக்கும் காப்பீடு செய்துள்ளது. இந்த காப்பீடு முறையில் விதிமீறல் நடைபெற்று உள்ளது எனக்கூறி காப் பீட்டுத் தொகையை தர காப்பீட்டு நிறு வனம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, காப்பீட்டுத் தொகை யும், இழப்பீடும் கேட்டு சிவகாமி நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார் விசாரணை முடிவடைந்த நிலை யில், செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதி பதி டாக்டர் வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகி யோர் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப் பில் கூறப்பட்டுள்ளதாவது, காப் பீட்டு நிறுவனத்துக்கும், பள்ளம் பாறை பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட  ஒப்பந்தப்படி அரசு மானியக் காப் பீட்டு திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஐந்து கால்நடைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும் என உள்ளது. ஆனால் இந்த விதியை மீறி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாமி குடும்பத்தினரிடம் ஏழு மாடுகளுக்கு பிரீமியம் வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தி யுள்ளது. நடந்த தவறுக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கமே முழு பொறுப்பாகும். இருப்பினும் ஒரே  கணக்கு எண்ணில் ஏழு கால்நடைக ளுக்கான காப்பீட்டுக்கு காப்பீட்டு நிறுவனம் ரசீது வழங்கியுள்ளது.  எனவே, காப்பீட்டு நிறுவனம் இறந்து போன மாட்டிற்கான காப் பீட்டுத் தொகை ரூபாய் 40 ஆயிரத்தை  8 வாரங்களுக்குள் செலுத்திவிட்டு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத் திடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தை வழக்கில் சேர்க் காததால் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடு எதுவும் வழங்க முடியாது எனவும், அந்த உத்தரவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.