districts

எஃப்சிஐ குடோன் இணைப்பு சாலை சீரமைத்திடுக மாநகராட்சி ஆணையருக்கு பி.ஆர். நடராஜன் எம்பி., கடிதம்

கோவை, ஜூலை 2- கோவை மாவட்டம் சத்தியமங்க லம் சாலையில் இருந்து எஃப்சிஐ குடோன் உள்ள இணைப்பு சாலையை சீரமைத்திட கோரி மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்  அனுப்பியுள்ளார். இதில் பி.ஆர்.நடராஜன் எம்பி.,  தெரிவித்துள்ளதாவது, சத்தியமங்க லம் சாலையில் இருந்து எஃப்சிஐ குடோன், கணபதி வரையிலான எஃப் சிஐ இணைப்புச் சாலையை கோயம் புத்தூர் மாநகராட்சிக்கு (தமிழ்நாடு) ஒப்படைப்பது தொடர்பான நீண்ட காலப் பிரச்சினை நிலுவையில் உள் ளது. இப்பிரச்சனை தொடர்பான கடி தம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரிடம் இருந்து பெறப் பட்டுள்ளது. இதில் உணவுக் கழ கத்தை ஒப்படைப்பது தொடர்பாக சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட் டுள்ளன.

இந்தியாவின் (FCI) இணைப்புச் சாலையானது சத்திய மங்கலம் சாலையில் இருந்து FCI குடோன் கணபதி வரை உள்ள இணைப்புச் சாலை 1.5 கி.மீ நீளமும், 100 அடி அகலமும் கொண்டதாக உள் ளது. தினந்தோறும் ஹெச்.பி.எல்., சிவில் சப்ளை செய்யும் 6 சக்கர லாரிகள், இருபுறமும் வசிக்கும் மக் கள், அலுவலகம் செல்பவர்கள் என  சாதாரண மக்கள் அன்றாடம் இச் சாலையை பயன்படுத்துகின்றனர். இணைப்பு ரோடு பழுதடைந்துள்ள தால், இரு சக்கர வாகனங்கள் கூட அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இந்த நீட்டிக்கப்பட்ட சாலையில் முறையான தெருவிளக்கு, சாக்கடை கால்வாய்கள் போன்றவை பராம ரிக்கப்படுவதில்லை. அணுகுமுறை பராமரிப்புக்கு தேவையான ஏற்பாடு களை மேற்கொள்ள கோவை மாநக ராட்சி ஆணையருடன் ஒருங்கி ணைந்து செயல்பட கோவை எஃப். சி.ஐ., கோவை கோட்ட மேலாளருக் கும் அமைச்சர் தனது கடிதத்தில் உத் தரவிட்டுள்ளார். சாலை, சாக்கடை பாதைகளை சரிசெய்தல் தெருவி ளக்கு ஏற்பாடுகள் மற்றும் எஃப்சிஐ அணுகு சாலை நிலத்தை இழப்பீடு செலுத்தி கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் கொடுக்கப்பட்டுள் ளது. கோவை தமிழ்நாட்டின் இரண் டாவது மிகப்பெரிய நகரமாகும். கோவை மக்களின் நலனுக்காக இந்த  விஷயத்தில் கோவை மாநகராட்சி மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள்  இந்த இணைப்புச் சாலையின் பராம ரிப்புச் சிக்கலை  முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என தெரிவித் துள்ளார்.