districts

img

முதுமலை தேசிய பூங்கா,,,

 முதுமலை தேசிய பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகமானது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. 1940 இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும். தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956 ஆம் ஆண்டு 295 சதுர கிமீ  ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கிமீ பரப்பளவை அடைந்துள்ளது. மேலும், இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காப்பகத்தில் முதுமலை தேசிய வனப்பூங்கா 103 சதுர கி.மீ பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கர்நாடகத்தில் பந்திப்பூர் தேசியப் பூங்காவும், கேரளாவில் வயநாடு வனவிலங்கு காப்பகமும் உள்ளது. முதுமலை வனவிலங்கு காப்பகம் உதகமண்டலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ளது. மேயாறு, இக்காப்பகத்தின் ஊடாக செல்லுகிறது. இங்குள்ள யானைகள் முகாம் பார்வையாளர்களைக் கவரும் ஒன்றாகும். யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற பல்வேறு வகையான விலங்குகளும், காட்டுக்கோழிகள், வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.  இங்கு வெப்பமண்டல ஈடு இலையுதிர் காடுகள், வெப்பமண்டல உலர் இலையுதிர் காடுகள், தென் வெப்பமண்டல் புதர் காடுகள் என மூன்று வகையான காடுகள் உள்ளது. இந்த தேசியப் பூங்காவில் மழைப் பொழிவு அதிகமுள்ள மேற்குப் பகுதியில் ஈர இலையுதிர் காடுகளும், மழைப் பொழிவு குறைந்த கிழக்குப் பகுதியில் உலர் இலையுதிர் காடுகளும் காணப்படுகிறது.