districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

உதகை, டிச. 20- நீலகிரி மாவட்ட சிறு பான்மை மக்கள் நலக்குழு வின் மாவட்ட மாநாடு நடை பெற்று, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழுவின் நீல கிரி மாவட்ட மாநாடு கூடலூர் - தேவர்  சோலாவில் நடைபெற்றது. வழக்கறிஞர் ஏ.சி.சாக்கோ தலைமையில் நடைபெற்ற  இம்மாநாட்டை துவக்கிவைத்து, சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ் ணன் உரையாற்றினார். இம்மாநாட்டை வாழ்த்தி, சையது அக்பர் புகாரி, ஆர்சி  தேவாலயத்தின் ஃபாதர் ஆன்டனி செபாஸ் டின் மற்றும் பிரம்மயோகி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாதா அம்பிகா சைதன்யா மயி ஆகியோர் பங்கேற்று மதநல்லினக்க உரையாற்றினர்.  முன்னதாக மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில்,  மாவட்டத் தலைவராக ஏ.சி.சாக்கோ, செய லாளராக பி.அனீபா, பொருளாளராக பி.ஏ.தா மஸ் மற்றும் 25 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் நோக் கங்கள் குறித்தும், இலக்குகள் குறித்தும் சங்கத்தின் மாநிலத் தலைவர் நூர்முகம்மது நிறைவுரையாற்றினார். இம்மாநாட்டில் திர ளானோர் பங்கேற்றனர்.