திருப்பூர், ஆக.5- 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற திருப்பூர் யூனிவர்சல் மாணவி மகா லட்சிமியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் சனியன்று நேரில் பாராட்டி னார். திருப்பூர் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இ. மகா லட்சுமி கடந்த கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண் பெற்று மாநில அள வில் முதலிடம் பெற்றார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் மாணவியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மகாலட்சுமியின் தாயாரை யும் பாராட்டினார். இந்த நிகழ்வில் பள்ளியின் தாளா ளர் சாவித்திரி ராஜகோபால், முதல் வர் ந.விஸ்வநாதன், செயலாளர் எஸ்.ஆர்.வினோதரணி ராஜகோ பால் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக இளைஞரணி முன் னாள் துணை அமைப்பாளர் ஷா.அப் துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண் டனர்.