மினி சந்தையான பப்ளிக் பள்ளி அசத்திய சிறு குழந்தை வணிகர்கள்
கோவை, பிப்.26- சரவணம்பட்டியில் உள்ள பப்ளிக் பள்ளியில் நடை பெற்ற கிராண்ட் காலா நிகழ்ச்சியில், வர்த்தகம் சார்ந்த திறன் களை பள்ளி மாணவ, மாணவிகள் புரிந்து கொள்ளும் வித மாக கண்காட்சி நடைபெற்றது. நவீன தொழில்நுட்பம், ஆன்லைன் வணிகம் என வர்த்தகம் ஒருபுறம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தொழில் முனைவோர் களாக சாதித்து வருகின்றனர். வணிகம் சார்ந்த வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் போதே வணிகம் சார்ந்த துறையை மாணவர்கள் தெரிந்து கொள்வது என்பது தற்போது அவசியமாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்த புரிதலை ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியிலுள்ள அல்க்கெமி பப்ளிக் பள்ளியில், “கிராண்ட் காலா” எனும் நிகழ்ச்சியை நடத்தி அசத்தி யுள்ளனர். இதில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு, சிறு வணிக திருவிழாவையே பள்ளியில் நடத்தியுள்ளனர். பெற்றோர் கள் தயாரித்த உணவுப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், கைவினைப்பொருட்கள், புத்தகங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், மரச்சாமான்கள், ஆடைகள், விளையாட்டுப் பொம்மைகள், வண்ண மீன் விற்பனை நிலையங்கள், மூலிகைச் செடி விதைகள், ஜோதிட நிலையம், சமையல் மசாலா பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் குழந்தைகளும் தங்களது பெற்றோர்களின் வணிக திறமையை கண்டு வியந்தனர். அதேபோல மாணவ, மாணவிகளும் தங்களது பொருட்களை போட்டி போட்டு விற்பனை செய்தனர். மாணவ, மாணவிகள் ஒருங்கி ணைத்த “கிராண்ட் காலா” பள்ளியையே மினி சந்தை யாக மாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
திருப்பூர் பிப்.26 - திருப்பூரில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ, மாணவிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங் கப்பட்டது. திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள தனி யார் பள்ளியில் தனியார் சிலம்பாட்ட கழகம் சார்பில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்டுக்கான சிலம்பம் போட்டி நடை பெற்றது. இதில், ஆறு வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடிக்க முயன்றனர். இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர்.
இரும்புக் கடையில் திருடியவர் கைது
திருப்பூர், பிப்.26- காங்கயத்திலுள்ள புலி மாநகரை சேர்ந்தவர் கனக ரத்தினம் (46). பழைய இரும்புக் கடை வைத்துள் ளார். கனகரத்தினம் வெள்ளியன்று கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், ஒருவர் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்துள்ளார். போலீசார், அவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர், கடலூர் மாவட்டம், விருதாச் சலம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (44) என்பதும், இவர், கனகரத்தினத்தின் கடையிலிருந்து 15 கிலோ இரும்புகளை திருடி வந்த தும் தெரியவந்தது. இதை யடுத்து, அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி திருப்பூர் சிறை யில் அடைக்கப்பட்டார்.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சேலம், பிப்.26- வெயிலின் தாக்கம் மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட் டில் சுற்றுலா பயணிகள் ஞாயிறன்று குவிந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு கடந்த 10 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏற்காட்டில் பனி சற்று குறைந்துள்ளதால், இந்த குளுமையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வந்த திரளான சுற்றுலா பய ணிகள் ஏற்காடு அண்ணா பூங்காவிற்கு சென்று, பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். இங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்த னர். படகு இல்லத்திற்கும் திரளானோர் சென்று படகில் சென்று இயற்கை அழகை ரசித்தனர்.
அரசுப்பள்ளி அருகே தீ விபத்து
கோவை, பிப்.26- ஆனைமலை அருகே உள்ள சோமந்துறை சித்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தென்னை நார் உலர் களத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த கோட் டூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவருக்கு சொந்தமான தென்னை நார் உலர் களம் சோமந்துறை சித்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இந்நிலை யில், அந்த தென்னை நார் உலர் களத்தில் திடீரென தீ பற்றியது. காற்றில் தீ மளமளவென பரவ துவங்கியது. இதனை யடுத்து அக்கம் பக்கத்தினர் டேங்கர் லாரிகளில் தண்ணீர் மற்றும் மணலை பயன்படுத்தி, நீண்ட நேரம் போராட்டத் துக்குப் பிறகு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. பள்ளி விடுமுறை என்பதால் இன்று பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே பள்ளிக்கு மிக அருகாமையில் தென்னை நார் உலர் களம் இருப்பதால், அவற்றிலிருந்து வரும் தூசி மற்றும் நாற்கழிவுகள் மாணவர்களின் கண்களில் பட்டு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளும், சுவாச கோளாறுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி அருகே உள்ள உலர் களத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே தற்போது ஏற் பட்ட தீ விபத்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
உடுமலை அருகே மூடி கிடக்கும் நாட்டுக்கோழி குஞ்சு பொரிப்பகம்
உடுமலை, பிப்.26- உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையில் மூடி கிடக்கும் நாட்டுக்கோழி குஞ்சு பொரிப்பகத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குறிச்சி கோட்டையில் கால்நடைத்துறை சார்பில், மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 2012 - 13 ஆம் ஆண்டில் ரூ.25.30 லட்சம் செலவில் நாட்டுக்கோழி குஞ்சு பொரிப்பகம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு 2 ஆயிரம் முட்டை களை அடைகாக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ஏழு முறை 2 ஆயிரம் கோழி குஞ்சுகள் உற் பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. குஞ்சுகளை ஒரு மாதம் வரை பராமரித்து இலவசமாகவும், ரூ.20 மற்றும் ரூ.40 என திட்ட நிதி அடிப்படையில் மலைவாழ் மக்கள், சிறு குறு விவ சாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த குஞ்சு பொரிப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்கு தொடர் செலவின நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த குஞ்சு பொரிப்ப கம் மூடி கிடக்கிறது. கட்டிடம் பாலடைந்து புதர் மண்டி கிடக் கிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
பகலில் சாலை பணி: போக்குவரத்து இடையூறு
கோவை, பிப்.26- பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் பகல் நேரத்தில் மேற்கொள்ளப் படும் மழைநீர் வடிகால் கட்டும் பணியால், சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற் பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் 3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது. கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த கோட்டூர் பகுதியில் அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு மழை நீர் வடிகால் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோட் டூர் சாலை பகுதியானது பொள்ளாச்சி, ஆனை மலை, உடுமலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பிரதான பகுதியாகும். இங்கு பெரும்பாலும் போக்குவரத்து அதிகமாகவே இருக்கும். மேலும், அரசு மருத்துவமனை அருகே உள்ளதால் அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் இவ்வழியாகத்தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதேசமயம் மாற்று வழியை பயன்படுத்தினால் 3 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்ல வேண்டியுள் ளது. இந்நிலையில், பரபரப்பாக காணப் படும் இச்சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் இரு புறங் களிலும் லாரிகள் நிறுத்தப்பட்டு, ஜேசிபி இயந்திரம் கொண்டு மழைநீர் வடிகால் கட் டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகளில் இந்த பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற் பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் உள் ளிட்ட வாகனங்கள் 3 கிலோ மீட்டர் தொலை விற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோட்டூர் சாலை பகுதி யில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி களை இரவு நேரத்தில் செய்தால் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு இருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.
100 நாள் வேலையை பேரூராட்சிக்கு விரிவுபடுத்த வலியுறத்தி முதல்வருக்கு மனு
உதகை, பிப்.26- நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டு மென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு குன் னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது, நீலகிரி மலை மாவட்டத்தில் 35 ஊராட்சிகளும், 11 பேரூராட்சிகளும் உள் ளன. பேரூராட்சி பகுதிகளில் சிறு, குறு தேயிலை விவசாயிகள், விவசாய கூலி தொழி லாளர்கள், பெரும் தேயிலைத் தோட்ட தொழி லாளர்கள் மட்டுமே வாழ்கின்றனர். தொழிற் சாலைகளோ சிறுதொழில் நிறுவனங்களோ இப்பகுதிகளில் இல்லை. 10 மீட்டர் இடை வெளியிலுள்ள கிராம மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளுக்குச் செல்வதை பார்க்கும் பெண் கள், தங்கள் பகுதிகளில் இத்திட்டம் இல்லா மல் போனது ஏன்? என்று கேட்கும் கேள்விக்கு, உங்கள் பகுதி பேரூராட்சி (நகர பங் சாயத்து) என்று கூறும்போது, ஒன்றும் புரியா மல் திகைக்கின்றனர். தேயிலை விலை வீழ்ச்சி, பனியால் தேயிலை செடிகள் கருகு தல் உள்ளிட்டவற்றால், அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த அல்லல்படுவ தைக் காண்கிறோம். வேலைவாய்ப்பு எதுவும் இல்லாததால் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. இதனால், நீலகிரி மாவட்ட கிராமங்க ளில் கந்துவட்டி கொடுமைக்கு பெண்கள் ஆளாகி தற்கொலைகளும் நடக்கின்றன. எனவே, ஊரக பகுதிகளில் மட்டுமே உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, நீலகிரி மலை மாவட்டத்தின் மோசமான பொருளாதார நிலை, மகளிர் நிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, சிறப்புத் திட்டமாக பேரூராட்சி பகுதிகளுக் கும் விரிவுப்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பாறை மீது மோதி அரசு பேருந்து விபத்து
உதகை, பிப்.26- கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிர்பாரதவிதமாக பாறை மீது மோதி விபத் துக்குள்ளானது. நீலகிரி மாவட்டம், கரிக்கையூர் பழங்குடி யின கிராமத்திற்கு சனியன்று காலை 10.30 மணிக்கு 16 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோத்தகிரியிலிருந்து சோலூர் மட்டம் வழி யாக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டி ருந்தது. பேருந்தை ஓட்டுநர் ராஜ்குமார் என் பவர் இயக்கியுள்ளார். கரிக்கையூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே கார் ஒன்று வந்தது. காருக்கு வழிவிட பேந்தை திருப்பியபோது, அவரது கட்டுப் பாட்டை இழந்து எதிரே சாலையோரத்தில் இருந்த பாறையின் மீது மோதி நின்றது. இவ் விபத்தில் பயணிகள் உட்பட யாரும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
நீலகிரி: 237 குழந்தைகளுக்கு இருதய பிரச்சனை
உதகை, பிப்.26- நீலகிரி மாவட்டத்தில் 237 குழந்தை களுக்கு இருதய பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள் ளதாக ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித் துள்ளார். மாவட்ட தொடக்க நிலை இடை யீட்டு சேவைகள் மையம், அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பொது சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்டம் ஆகி யவை சார்பில், உதகை அரசு செவி லியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குழந் தைகளுக்கான சிறப்பு இருதய பரிசோ தனை முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தொடங்கி வைத்து பேசுகையில், குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி குழந்தை கள் பயன்பெறும் வகையில் ஊட்டத்தை உறுதிசெய்யும் திட்டத்தை, நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அங் கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளி சிறார் குழந்தைகள் நலத்திட்ட குழுக்கள் மூலமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறந்த குழந்தைகளையும், அங்கன் வாடி மையங்களிலும், பள்ளிகளிலும் படிக்கும் 0-19 வயது வரை உள்ள குழந்தைகளையும் பொது சுகா தாரத் துறையின் பள்ளி சிறார் குழந் தைகள் நலத்திட்டத்தின் 8 குழுக்கள் மூலமாக பரிசோதித்ததில், 237 குழந் தைகளுக்கு இருதய பிரச்சினை களுக்கான அறிகுறிகள் கண்டறியப் பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக் கப்பட்டனர். இம்முகாமில் எக்கோ பரி சோதனை மூலமாக இருதய பிரச்சனை கள் உறுதி செய்யப்பட்டு, தேவைப் படும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச் சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும்” என்றார்.
ரேசன் அரிசியை கடத்த முயற்சி
கோவை, பிப்.26- கோவை, வேலாண்டி பாளையம் அருகே மல்லேஸ் வரி நகரில், குடிமை பொருள் வழங்கல் ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் அடங்கிய தனிப்படை காவல் துறை யினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், காரின் பின்புறம் 12 மூட்டைகளில் 600 கிலோ எடை கொண்ட பொது விநி யோகத் திட்ட ரேசன் அரிசி பதுக்கி வைத்து, கடத்தப்படு வது தெரிய வந்தது. இதனை யடுத்து வாகனத்தை ஓட்டி வந்த மோகன் என்ற நபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடமிருந்து ரேசன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மார்ச் 5ல் நீலகிரி புத்தக திருவிழா
உதகை, பிப்.26- நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா மார்ச் 5 ஆம் தேதியன்று துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மார்ச் 5 ஆம் தேதியன்று துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா மார்ச் 14 ஆம் தேதியன்று நிறை வடைகிறது. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடை பெறும் இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள் இலவச மாக பார்வையிடலாம். நீலகிரி மாவட்ட நிர்வாகம், தென்னிந் திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஒருங் கிணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இத்திருவிழாவில் அமைக்கப்படும் 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன. தொல்லியல் அருங்காட்சிய கம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பழங்குடியின ரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங் கள், ஆளுமைகள் பங்கேற்கும் இலக்கிய நிகழ்வுகள் இத்திரு விழாவில் இடம் பெறவுள்ளன என ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.