districts

img

பால் கொள்முதல் பாக்கியை வழங்கிடுக

தருமபுரி, மார்ச் 25- பால் கொள்முதல் செய்ததற் கான பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் கொள்முதல் விலையை 1  லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி,  பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எரு மைப்பாலுக்கு ரூ.51 எனவும் வழங்க வேண்டும். பாலுக்கான பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். பால் அளவு, தரம் இவற்றை பால் வழங்கும்  இடத்திலேயே குறித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடரை சேர்த்து வழங்க வேண்டும். கால்நடை தீவனங்கள் தரமாக, 50 சதவிகித மானிய விலையில் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கே.அன்பு தலைமை  வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் கே.முகமது அலி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் சோ.அருச்சுணன், மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட பொருளாளர் வள்ளியம் மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின்‌ மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலா ளர் எம்.முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட செயலாளர் கே.எம். விஜயகுமார் தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலைவர் ஏ.எம். முனுசாமி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.முத்துச்சாமி, ஈரோடு மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க  தலைவர் காசியண்ணன் உள் ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின், கோரிக்கைகள் அடங்கிய  மனு ஆவின் நிர்வாக மேலாளரி டம் அளிக்கப்பட்டது.