கோவை, நவ. 4- அதிமுக கவுன்சிலர்கள் தரக்கு றைவாக பேசியதால் தான் கூட்டத் தில் பிரச்சினை உருவானது என மேட் டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் மெகரீபா பர்வீன் குற்றம் சாட்டி யுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகர்மன்ற கூட்டம் கடந்த 31 ம் தேதி நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளாததால், கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அதே சமயம் கூட்டத்தை நடத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்ததால், திமுக மற்றும் அதி முக கவுன்சிலர்கள் இடையே வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக கவுன்சி லரை கைது செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதும் செய்யப்பட்டனர். இந்நிலை யில், இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக பொது செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச் சாமி ஒரு கண்டன அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக சனிக்கிழமையன்று பத்திரிக்கையா ளர்களை சந்தித்து பேசிய நகர்மன்ற தலைவர் மெகரீபா பர்வீன், “நகர் ்மன்ற கூட்டத்தை நடத்த விடக்கூ டாது என துவக்கம் முதலே அதிமுக கவுன்சிலர்கள் திட்டமிட்டு செயல் பட்டனர். பெண் தலைவர் என்றும் பாராமல் என்னை ஒருமையில் பேசி தகாத வார்த்தைகள் கூறியதால் பிரச் சனை ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் நகராட்சி யில் எந்த வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை முடக் கும் விதமாக இது போன்ற உள்ளி ருப்பு போராட்டங்கள் அதிமுகவி னரால் நடத்தப்படுகிறது. இவ்விகா ரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலை வர் வெளியிட்ட அறிக்கை முற்றி லும் உண்மைக்கு புறம்பானது” என் றார்.