சேலம், ஜூன் 11- குளறுபடி என்பது நீட் தேர்வின் அங்கமாக மாறிவிட்டது என்று குற் றஞ்சாட்டி, இந்திய மாணவர் சங்கத் தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு முடிவுகள் அறிவிக் கப்பட்ட பிறகு, தேசிய தேர்வு முக மையின் தேர்வு நடத்தையின் வெளிப்படைத்தன்மையை கேள் விக்குள்ளாக்கும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன் விளைவாக, நீட் போன்ற மையப்ப டுத்தப்பட்ட நுழைவுத்தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை தகுதியற்றது என்பது மீண்டும் நிரூ பிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் எந் தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை சார்பில், மத்திய உயர் கல்வித்துறை செய லாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கமளித் துள்ளார். ஆனால் உண்மை என்ன வெனில், நீட் தேர்வு துவங்கப்பட்ட நாள் முதல் முறைகேடு என்பது அதன் பிரிக்க முடியாத அங்கமாக மாறி இருக்கிறது என்பதே உண்மை என இந்திய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வில் நாடு முழுவதும் நடை பெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண் டும்.
தேர்வு நடத்துவதில் இருந்து தேசிய தேர்வு முகமை எனும் தனி யார் நிறுவனத்தை விளக்குவ தோடு, அதன் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி செவ்வாயன்று இந்திய மாண வர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாணவர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் டார்வின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன், மாவட்ட துணைத்தலைவர் கோகுல் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட துணைச்செயலா ளர் அபிராமி, துணைத்தலைவர் கீர்த்தி வாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் திவ்யா, வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு செவ்வாயன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நாமக் கல் மாவட்டத் தலைவர் மு.தங்க ராஜ், மாவட்டச் செயலாளர் தே. சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சே.கார்த்தி, மாவட்ட நிர்வாகிகள் முகமதுநிசார், தனுஷ், பிரியாதர்ஷினி, ஜீவிதா, கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.