திருப்பூர், ஜூலை 21- கட்டுமானத் தொழிலாளர் களின் மருத்துவச்செலவை, தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர் நலவாரியம் ஏற்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட கட்டுமானத் தொழி லாளர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு தாலுகா 14 ஆவது மாநாடு ஞாயிறன்று திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் நடை பெற்றது. தெற்கு தாலுகாத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை, சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி துவக்கி வைத்தார். சிஐ டியு சாலையோர வியாபாரிகள் சங்க செயலா ளர் பி.பாலன், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.ஜெயபால் உள் ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், கட்டுமானத் தொழிலாளர் ஓய்வூதிய தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு வயதை 55 ஆக நிர்ணயித்து ஓய்வூதி யம் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு களை விரைந்து பரிசீலிக்க வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களின் மருத்துவச் செலவை நலவாரியம் ஏற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் திருப்பூ தெற்கு தாலுகாத் தலைவராக கே.பொம் முதுரை, செயலாளராக பி.ரமேஷ், பொருளா ளராக ஆர்.செல்வகுமார், துணைத்தலை வர்களாக எம்.எஸ்.பிச்சை, பி.ஆறுமுகம், எஸ்.ஜோதி, துணைச்செயலாளர்களாக டி. பெருமாள், ஆர்.ரத்தினசாமி, பி.ஞானசேகர் உட்பட 21 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட் டுமானத் தொழிலாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார் நிறைவுரை யாற்றினார். துணைச்செயலாளர் டி.பெரு மாள் நன்றி கூறினார்.