districts

img

4 நாட்கள் குப்பை கொட்ட அவகாசம் கேட்ட மேயர் காளம்பாளையம் மக்கள் அனுமதிக்க மறுப்பு

திருப்பூர், மே 27- திருப்பூர் அருகே காளம்பாளை யம் பாறைக்குழிகளில், இன்னும் நான்கு நாட்கள் குப்பை கொட்டி விட்டு அதில் மண்ணைக் கொட்டி மூடி விடுவோம் என மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் கூறிய யோசனையை  ஏற்க, கிராம மக்கள் உறுதியாக மறுப்புத் தெரிவித்தனர். இதை மீறி  குப்பை கொட்ட வந்தால் லாரியை சிறைப் பிடிப்போம் என்றும் கூறி யுள்ளனர். திருப்பூர் அருகே பொங்குபா ளையம் ஊராட்சி காளம்பாளையம் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்த மான காலாவதியான பாறைக்குழிக ளில் மாநகராட்சி குப்பை கொட்ட வந்தால் அப்பகுதி மக்களைத் திரட்டி  லாரிகளைச் சிறை பிடிப்போம் என  மாநகராட்சி அலுவலர்களிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. இதில், மேயர் ந.தினேஷ்குமார்  கூறுகையில், ஏற்கெனவே காளம்பா ளையம் பகுதியில் நடைபெற்ற கூட் டத்தில் கூறியபடி குப்பை கொட்டப்ப டும் பாறைக்குழிகளை முழுமையாக  மூடி அங்கு பூங்கா அமைத்து தரு கிறோம். பாறைக்குழிகளை முழுமை யாக மூட குறைந்தது 600 லோடு  மண் தேவைப்படுகிறது. தற்போது  மாநகரப் பகுதியில் பல்வேறு சாலை  விரிவாக்க பணிகள் நடைபெற்று வரு கின்றன. அதன்மூலம் கிடைக்கும் மண்ணை வைத்து முழுமையாக மூடிக் கொடுக்கிறோம். இன்னும் 4  நாட்களுக்கு பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டி, அதன் மீது மண்  கொட்டி சமன் செய்யப்படும். எனவே  இதற்கு இன்னும் நான்கு நாட்கள் அவ காசம் வேண்டும் என்றார். இதையடுத்து பேசிய மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர், திருப்பூர்  மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தோல்வி  அடைந்துள்ளது. ஒவ்வொரு இடங்க ளில் குப்பை கொட்டும்போதும் மக் கள் எதிர்ப்பு தெரிவித்தால், திடக்க ழிவு மேலாண்மை திட்டத்தை செயல் படுத்துகிறோம் என கூறுகிறார்களே  தவிர, செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காளம்பாளையம் பாறைக்குழிகளில் ஒரு படலம் குப்பை கொட்டி, அதன் பின் அடுத்த  படலம் மண் கொட்டப்படும், அதன்  பின் தான் மீண்டும் குப்பை கொட்டப்ப டும் என மாநகராட்சி தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது. ஆனால் அப்படிச்  செய்யவில்லை. மாறாக குப்பைக ளுக்கு மருந்து கூட அடிக்காமல் அப்ப டியே குப்பையை கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் கடுமையாக  மாசடைந்துள்ளது. கூட்டுக் குடிநீர்  திட்டத்தில் முறையாக தண்ணீர் கிடைக்காத நிலையில், ஆழ்குழாய் கிணறு தண்ணீரை நம்பித்தான் அப்ப குதி மக்களும், விவசாயிகளும் உள் ளனர். இந்நிலையில் இந்த குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இன்னும் மோசமான சூழ லுக்குத் தள்ளுகிறது. போராட்டம் நடத்தும்போது அதிகாரிகள் வரு கின்றனர். அப்போதைக்கு மட்டும் மருந்து அடிக்கின்றனர். அதன் பின்  யாரும் வருவதில்லை. பாறைக்குழி களில் பிளாஸ்டிக் கொட்டப்பட்டுள் ளது. அதன் மீது மரம் வளர்வதற்கான  சாத்தியக்கூறு இல்லை. மாநகராட்சி யில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் முறையாக செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை. அதை கண்காணிக்க வேண்டிய அதி காரிகளும் முறையாக ஆய்வு செய்யவில்லை. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட்டிருந்தால், தற்போது ஏற் பட்டுள்ள நிலை வந்திருக்காது எனவே நான்கு நாட்களுக்கு பின்  குப்பை கொட்டுவதை நிறுத்துவ தற்கு பதிலாக, இப்போதிருந்தே நிறுத்தி விடுங்கள். மீறி குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப் போம் என தெரிவித்தனர்.  இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டிற்கு முழுமையாக ஆத ரவு தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள அரசு  பாறைக்குழிகளில் குப்பைக் கழிவு களை கொட்ட அனுமதித்திருப்பது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு. எனவே மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து விட்டு உரிய  தீர்வு காண்பதாக மேயர் தெரிவித் தார். இந்த பேச்சுவார்த்தையில், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணி யம், துணை ஆணையர் மகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி, கிளைச்செயலாளர்கள் விஸ்வ நாதன், சுரேஷ்குமார், கிருஷ்ணசாமி,  நாகராஜ், பேச்சிமுத்து உள்ளிட்ட பல் வேறு அரசியல் கட்சியினர், பொது மக்கள் பங்கேற்றனர்.