18ஆவது மக்களவை தேர் தலை ஒட்டி தமிழ்நாடு முழுவ தும் பிரச்சாரங்கள் சூடுபிடித் துள்ளன. ஒருபக்கம் பாஜக அரசை வீழ்த்தி நாட்டில் ஜனநா யகத்தை நிலை நிறுத்த வேண் டும் என, இந்தியா கூட்டணியின் திமுக தலைமையிலான கட்சி கள், ஒன்றிய மோடி அரசின் மக் கள் விரோத கருத்துகளை மக்க ளிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். முறையாக தேர்தல் நடத்தை விதிகளையும் பின்பற்றி, அதிமுகவின் தவறை யும், பாஜகவின் மக்கள் விரோத கொள்கையை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்து வருகின்றனர். மறுபக்கம், எதற்கு தேர்த லில் நிற்கிறோம், யாரை எதிர்ப் பது, யாருக்கு ஆதரவு தருவது, எதை சொல்லி வாக்கு சேகரிப்பது என தெரியாமல், குட்டி போட்ட பூனை போல் அங்கேயும் இங்கே யும், சுற்றி தன்னை தானே ஏமாற்றி, மக்களையும் முட்டா ளாக்க நினைக்கிறது அதிமுக. இன்னொரு பக்கம் பத்து வருடமாக ஊழல் செய்துவிட்டு, சம்பாதித்த பணம் பத்தாது என்று, மீண்டும் நாட்டை குட்டி சுவராக்க கங்கணம் கட்டி திரி கிறது பாஜக. தமிழ்நாடு முழுவ தும் வரட்டு கவுரவத்துடன் சுற்றும் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு தான் இல்லை. போகும் இடமெல்லாம், ’ஈ’ ஓட்டி வருகின்றனர். எப்படியா வது எங்களுக்கு கூட்டம் இருப் பதாக காட்டிக்கொள்ள, மோடியை ”ரோடு ஷோ” அழைத் தால், அவர் என்னவோ? ”பேஷன் ஷோவில் வருவது போல வித வித உடை அணிந்து பம்மாத்து காட்டி வருகிறார். இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது என்கிற மாதிரி, மக்களும் புறந்தள்ளி வருகின்றனர். இப்படி தமிழ்நாட்டு மக் கள் புறக்கணிப்பதை பொறுக்க முடியாத பாஜக கட்சியினர், ஆங்காங்கே தங்களை எதிர்த்து பேசும் மக்களையும், மக்கள் பிர திநிதிகளையும் வம்புக்கு இழுத்து, தகராறு செய்யும் வேலையை செய்து வருகின்ற னர். திருப்பூரில், மோடி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த நவீன மனிதர்கள் இயக்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளை, மோடி கும்பல் சட்டையை கிழித்து, பிரச் சார வாகனத்தை சேதப்படுத்தி னர். கோவை மக்களவைத் தொகு தியான பல்லடத்தில், ”பாஜக அரசால் தான் என்னுடைய விசைத் தறி தொழிலே வீழ்ந்தது” என பேசிய தொழிலாளியை ஈவு இறக் கமில்லாமல் தாக்கினர். இப்படி தமிழ்நாடு முழுவதும் அட்டூழியம் செய்து இவர்கள், செவ்வாயன்று மே 17 இயக்கத்திம் ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி யிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ”வீழட்டும் பாஜக, வெல்லட் டும் தமிழ்நாடு” என்ற முழக்கத் தோடு மே 17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக முழுவதும் பார திய ஜனதா கட்சியை அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிப் பதற்கான பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகை யில், செவ்வாயன்று கோவை மக்களவைத் தொகுதியில், ஒண் டிப்புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஒன்றிய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சா ரம் மேற்கொண்டு வந்த நிலை யில், அந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த னர். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் வந்த கட்சியினர் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். மே 17 இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மிரட்ட வும் செய்தனர். அதற்கு பதில டியாக திருமுருகன் காந்தி மற்றும் அவருடனான தோழர்கள் பெருங்குரலெடுத்து பாஜக வினரை எதிர்த்து முன்னேறினர். இதனை கண்டு பஜகவினர் பம்மி பின்வாங்கினர். பின்னர் பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் கத்த, ஜெய் பீம், பெரியார் வாழ்க, தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கங்களு டன் மே 17 இயக்கத்தினரும் முழக் கம் எழுப்பினர். மே 17 இயக்கத்தி னரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்த முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மே 17 இயக்கத்தி னர் உரிய அனுமதி பெற்று பிரச்சா ரம் மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வித மாக நடந்து கொண்டது குறிப்பி டத்தக்கது. இதனிடையே காவல்துறையினர் மே 17 இயக் கத்தினர் அணிந்திருந்த டீசர்ட்டு களை கழட்டுமாறு கூறவே போலீ சாருக்கும், மே 17 இயக்கத்தின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல், வஞ்ச கத்தை வெளிபடுத்தி வரும் இவர் களா? மக்களுக்காக சேவை செய்ய போகிறார்கள். இவர் களா? நம்முடன் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளை சந்திக்க போகிறார்கள். மக்கள் பிரச்சனை பற்றி கேட்டால், ஜெய் ஸ்ரீ ராம் என நழுவ மட்டுமே தெரி யும். தேர்தல் நடத்தை விதிக ளையே புரிந்து கொள்ளத் தெரி யாத பாஜகவினருக்கு, மக்களின் மனநிலையை எப்படி புரிந்து கொள்ள முடியும். என்னதான் உருண்டாலும் ஒட்டுகிற மண்ணு தான் ஒட்டும் என அங்கிருந்த பொதுமக்கள் முனுமுனுத்த படியே சென்றனர். -கோகுலகண்ணன்